தமிழ்நாடு

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

Published On 2025-03-09 07:01 IST   |   Update On 2025-03-09 07:01:00 IST
  • ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளனர்.
  • எம்.பி.க்கள் கூட்டம் குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது.

இந்த நிலையில், நாளை ( மார்ச் 10-ம் தேதி) பாராளுமன்றம் மீண்டும் கூட இருக்கிறது. அப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளனர்.

நாளை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

எம்.பி.க்கள் கூட்டம் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்?. எந்தெந்த பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும்? யார் யார் பேசு வேண்டும்? என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. 

Tags:    

Similar News