தமிழ்நாடு

கூட்டணிக்கு தவம் கிடக்கிறார்கள் என்று அ.தி.மு.க.வை சொல்லவில்லை- அண்ணாமலை விளக்கம்

Published On 2025-03-09 07:33 IST   |   Update On 2025-03-09 07:33:00 IST
  • நான் சொன்னதையும், எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் திரித்து திரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
  • பா.ஜ.க.வை பற்றி நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.

கோவை:

கோவையில் நேற்று முன்தினம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இது அரசியல் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று அண்ணாமலை கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நானும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி குறித்து தெளிவாக கூறி இருக்கிறோம். நான் அளித்த பேட்டியில் அ.தி.மு.க. என்ற பெயரை நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் அதுபற்றி விவாதத்துக்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

நான் சொன்னதையும், எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் திரித்து திரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க.வை பற்றி நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன். அ.தி.மு.க.வை பற்றி எடப்பாடி பழனிசாமியும் தெளிவாக பேசி இருக்கிறார். அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் பா.ஜ.க.வை திட்டுவதையே நோக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News