தமிழ்நாடு

திருப்பதி மலையில் வீடியோ எடுத்த விவகாரம்- டி.டி.எஃப். வாசன் வங்கி கணக்கு முடக்கம்

Published On 2025-03-09 08:21 IST   |   Update On 2025-03-09 08:21:00 IST
  • வீடியோ வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் டி.டி.எஃப். வாசன்.
  • டி.டி.எஃப். வாசன் தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

வீடியோ வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் டி.டி.எஃப். வாசன். அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்துவது, சர்ச்சைக்குரிய வகையில் வீடியோக்கள் பதிவிடுவது போன்ற காரணங்களுக்காக இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக சிறை தண்டனையையும் டி.டி.எஃப். வாசன் பெற்றுள்ளார்.

முன்னதாக, கடந்த 2024-ஆம் ஆண்டு திருப்பதி மலைக்கு டி.டி.எஃப். வாசன் சென்றிருந்தபோது, தரிசன வரிசையில் நின்று கொண்டிருந்த அவர், அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருமலை போலீசார், டி.டி.எஃப். வாசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் டி.டி.எஃப். வாசனின் வங்கிக்கணக்கை திருமலை போலீசார் முடக்கி வைத்திருப்பதாக அவரது வழக்கறிஞர் முத்து, தெரிவித்துள்ளார்.

மேலும், டி.டி.எஃப். வாசன் தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News