சிப்காட், மேம்பாலம், 4 வழிச்சாலை - நெல்லைக்கு புதிய திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர்
- நாங்குநேரியில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும்.
- நெல்லை மாநகரத்தில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
நெல்லை:
நெல்லையில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியில் நெல்லை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நெல்லை மாவட்டத்திற்கு 5 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர்,
* பாபநாசம் கோவிலில் உட்கட்டமைப்பு வசதி ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.
* நாங்குநேரியில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும்.
* நெல்லை மாநகரத்தில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
* நெல்லை மாநகரத்தில் புதிய கழிவு நீரகற்று நிலையம் கொண்டு வரப்படும்.
* மேலப்பாளையம் பகுதியில் அம்பாசமுத்திரம் சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம்.
* சென்னை, கோவை மட்டுமில்லாமல் தென் தமிழ்நாட்டில் நவீன தொழிற்சாலைகள் நிறைய அமைய வேண்டும்
* இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் இதுதான் என் இலக்கு.
* தென்பாண்டிச்சீமையை தொழில் வளர்ச்சி மிகுந்த சீமையாக மாற்றியது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என்று வருங்காலம் சொல்லும்! அந்த அளவிற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறேன் என்று பல அறிவிப்புகளை வெளியிட்டார்.