தமிழ்நாடு
சென்னையில் மார்ச் 1-ந்தேதி சீமான் பேரணி
- தமிழக அரசோ சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது.
- பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தியும் சென்னையில் பேரணியாக செல்ல சீமான் முடிவு செய்து உள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் தமிழக அரசோ சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரியும், பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தியும் சென்னையில் பேரணியாக செல்ல சீமான் முடிவு செய்து உள்ளார்.
மார்ச் 1-ந்தேதி இந்த பேரணியை பிரமாண்டமாக நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் வெளி மாவட்டங்களில் பேரணியை நடத்தலாமா என்பது பற்றியும் நாம் தமிழர் கட்சியினர் ஆலோசித்து வருகிறார்கள்.