இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்- ஜெகன் மோகன் ரெட்டியுடன் தமிழக குழு சந்திப்பு

Published On 2025-03-12 11:56 IST   |   Update On 2025-03-12 12:54:00 IST
  • ஜெகன் மோகனை தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5-ந் தேதி தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்வேறு மாநில முதல்-மந்திரிகளுக்கும், கட்சி தலைவர்களுக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்த கருத்தை விளக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபடி அமைக்கப்படவுள்ள கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

கேரளாவுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி, ஒடிசா மாநிலத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் செல்கின்றனர்.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகனை தமிழக குழு சந்தித்தது.

ஜெகன் மோகனை தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவுடனும் ஜெகன் மோகனை சந்தித்து பேசிய தி.மு.க. குழு, சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க. குழு அழைப்பு விடுத்துள்ளது.

Tags:    

Similar News