தமிழ்நாடு

மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு

Published On 2025-02-13 17:54 IST   |   Update On 2025-02-13 17:54:00 IST
  • தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் க.அண்ணாதுரை எம்.எல்.ஏ., அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
  • நீலகிரி மாவட்ட கழகக் செயலாளராக பணியாற்றி வரும் பா.மு. முபாரக் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகள்- மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தஞ்சை தெற்கு, நீலகிரி, திருநெல்வேலி மத்திய, திருவள்ளூர் கிழக்கு ஆகிய மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனத்து திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் க. அண்ணாதுரை எம்.எல்.ஏ., அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக பழனிவேல் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரான நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நீலகிரி மாவட்ட கழகக் செயலாளராக பணியாற்றி வரும் பா.மு. முபாரக் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக கே.எம். ராஜு நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக பணியாற்றி வரும் டி.பி.எம். மைதீன்கான் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக மு. அப்துல்வகாப் எம்.எல்.ஏ, திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வரும் டி.ஜெ.எஸ். கோவிந்தராஜன் எம்.எல்.ஏ., அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்குப் பதிலாக எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் திருவள்ளூர் கழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News