தமிழ்நாடு

தமிழக அமைச்சரவையில் மாற்றம்- பொன்முடிக்கு கூடுதல் இலாகா

Published On 2025-02-13 17:21 IST   |   Update On 2025-02-13 17:23:00 IST
  • அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை பொன் முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அமைச்சர் ராஜ கண்ணப்படன் பால்வளத் துறையை மட்டும் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

தமிழக அமைச்சரவையில் சிறிய அளவில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கான துறைகள் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை பொன் முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி காதி மற்றும் கிராம தொழில்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜ கண்ணப்படன் பால்வளத் துறையை மட்டும் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News