உள்ளூர் செய்திகள்

மருத்துவ வசதிகளை மேம்படுத்த கோரி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்- விஜய் வசந்த் எம்.பி

Published On 2025-02-13 14:48 IST   |   Update On 2025-02-13 15:13:00 IST
  • இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
  • கிராமப்புற மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கிய போதிலும் அது நமது தேசத்தின் சுகாதார மேம்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. நமது நாட்டின் வளர்ச்சி விகிதத்தின் 10 சதவிகிதம் சுகாதார மேம்பாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிலையில் இன்று அரசு வெறும் 2 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் போதிய நிதியினை அரசு ஒதுக்கவில்லை.

இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 1000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் தேவை என்ற வழிகாட்டு தலை விட குறைவாக 1500 இந்தியர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது.

குறிப்பாக கிராமங்களில் இந்த குறைபாடு மிக அதிக அளவில் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

இந்தியாவின் 50 சதவிகித மருத்துவமனைகளில் குடி நீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதி கள் இல்லாமல் உள்ளது. கோவிட் காலகட்டத்தில் நமது மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நாம் கண்டறிந்தோம். அது போன்ற ஒரு இடரை எதிர்கொள்ள நமது நாட்டில் மருத்துவ வசதி களை மேம்படுத்தி நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இந்தியர்களின் மருத்துவ செலவில் 62 சதவிகிதம் தங்கள் சொந்த காசில் செய்ய வேண்டிய கட்டா யத்தில் நமது மக்கள் உள்ள னர். ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. இவை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என கோரி ஒத்தி வைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்து உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News