எடப்பாடியார் செல்வாக்கை மறைப்பதற்காக ஆளுங்கட்சியினர் முயற்சி - செல்லூர் ராஜூ
- வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு செங்கோட்டையன் கேட்டாரா?
- த.வெ.க. தலைவர் விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது.
* எடப்பாடியார் நல்லதை செய்வார். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆட்சியை 2026-ல் கொண்டு வரப்போகிறார்.
* எடப்பாடியார் செல்வாக்கு கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த செல்வாக்கை மறைப்பதற்காக ஆளுங்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.
* வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு செங்கோட்டையன் கேட்டாரா?
* இந்த ஆட்சியில் எங்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கவில்லை. கேட்காத ஒருத்தருக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள்.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய முதலமைச்சர் தற்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை.
* முதலமைச்சர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. த.வெ.க. தலைவர் விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது.
* உறுதியாக, இறுதியாக எடப்பாடியார் தலைமையில் ஆட்சி மலரும். அவர் தலைமையில் அ.தி.மு.க. மலரும் என்று கூறினார்.