உள்ளூர் செய்திகள்

தைப்பூசத்தை முன்னிட்டு 600 முதியோருக்கு அறுசுவை உணவு- அமைச்சர் வழங்கினார்

Published On 2025-02-13 15:00 IST   |   Update On 2025-02-13 15:00:00 IST
  • ஏழை முதியோர்களுக்கு அறுசுவையுடன் கூடிய காலை உணவு வழங்கப்பட்டது.
  • யோகா மற்றும் ஒன்றிய கழக, ஊராட்சி கழக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

ஆவடி:

ஆவடி அருகே நடுக்குத்தகையில் தி.மு.க. தலைமை செயற்குழ உறுப்பினர் கே.ஜே.ரமேஷ் ஏற்பாட்டில் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு முதியோர்கள் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 600 ஏழை முதியோர்களுக்கு அறுசுவையுடன் கூடிய காலை உணவு வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு முதியோர்களுக்கு அறுசுவை காலை உணவை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருநின்றவூர் நகர செயலாளர் தி.வை.ரவி, மாவட்ட பொருளாளர் பா.நரேஷ் குமார், ஆவடி மாநகர பொருப்பாளர் சன் பிரகாஷ் மற்றும் மகா தேவன், யமுனா, ரமேஷ், லட்சுமி, செந்தாமரை, கந்தன், மோகன், கேட்டரிங் சுரேஷ், பிரவீன் குமார், சந்திரன், யோகா மற்றும் ஒன்றிய கழக, ஊராட்சி கழக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News