தமிழ்நாடு

அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும்- எடப்பாடி பழனிசாமி

Published On 2025-02-28 13:14 IST   |   Update On 2025-02-28 13:14:00 IST
  • அ.தி.மு.க. சார்பில் இருவர் கூட்டத்தில் பங்கேற்பர்.
  • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை கூட்டத்தில் தெரிவிப்போம்.

சேலம்:

அடுத்த 62 வாரங்களுக்கு தாங்கள் தான் எதிர்க்கட்சி என த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசப்பட்டதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

நாட்டில் ஆளுங்கட்சியை தவிர மற்ற கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சிகள்தான். ஆனால் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி. இன்றைக்கு எதிர்க்கட்சியாக உள்ளோம். 2026-ல் ஆளுங்கட்சியாக இருப்போம்.

வரும் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க பங்கேற்கும். அ.தி.மு.க. சார்பில் இருவர் கூட்டத்தில் பங்கேற்பர். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை கூட்டத்தில் தெரிவிப்போம் என்றார்.

Tags:    

Similar News