தமிழ்நாடு
கரூரில் பட்டப்பகலில் அரசு கல்லூரி மாணவி கடத்தல்- 3 தனிப்படைகள் அமைப்பு
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு தலைக்காதலால் மாணவியை இளைஞர், நண்பர்களுடன் வந்து கடத்தியதாக தகவல் வெளியானது.
கரூரில் பட்டப்பகதில் அரசு கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்றபோது மர்ம நபர்கள் மாணவியை கடத்தியுள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தலைக்காதலால் மாணவியை இளைஞர், நண்பர்களுடன் வந்து கடத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மாணவி ஆம்னி வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கல்லூரி மாணவியை கடத்திய ஆம்னி கார் கரூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையான வெள்ளோடு பகுதியை கடந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.