தமிழ்... தமிழ்... என்று பேசுபவர்கள் யாரும் தமிழுக்கு சேவையாற்றவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி
- தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை.
- வடக்கு - தெற்கு என்று இங்கே பிரித்து வைத்திருக்கிறார்கள்.
மகாகவி பாரதியாரின் இலக்கிய படைப்புகளை தொகுத்ததற்காக எழுத்தாளர் சீனி விஸ்வநாதனுக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்து கவுரவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் சீனி விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:
பாரதியாரும் அவரது பணிகளும் நமக்கு எப்போதும் தேவை. தமிழகத்தில் உள்ள அனைவரும் பாரதியாரை தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை. தமிழ்.. தமிழ்… என்று பேசுபவர்கள் யாரும் தமிழுக்கும், தமிழ் இலக்கணத்திற்கும் சேவையாற்றவில்லை.
பாரதம் ஒருங்கிணைந்த நாடு என்பதை ஏற்க மறுக்கும் கட்டமைப்பு இங்கே இருக்கிறது.
காஞ்சி - காசி இடையே இருக்கும் ஒற்றுமையை பாரதியார் பேசினார். ஆனால், வடக்கு - தெற்கு என்று இங்கே பிரித்து வைத்திருக்கிறார்கள். பாரதியார் வேதங்களை போற்றினார், இங்கு வேதங்களை வெறுப்பவர்கள் இருக்கிறார்கள்.
இம்மாநிலம் முழுவதும் சுற்றி இருக்கிறேன். மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை என்று பேசினார்.