தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 413 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2025-03-02 13:54 IST   |   Update On 2025-03-02 13:54:00 IST
  • மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
  • தற்போது அணையில் 77.82 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதற்கிடையே நேற்று தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று அணைக்கு வினாடிக்கு 252 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 413 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டமும் 109.59 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 77.82 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News