தமிழ்நாடு

விஜயலட்சுமி விவகாரம்: உங்கள் தலைவர் பெரியார் சொன்னதை தான் நான் செய்துள்ளேன் - சீமான்

Published On 2025-03-02 12:45 IST   |   Update On 2025-03-02 12:45:00 IST
  • திராவிடத்தை வீழ்த்த வந்த புலி நான்.
  • விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. ஆதாரம் என்னிடம் உள்ளது.

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் சீமான் பேசுவதை யெல்லாம் கேட்டுக்கொண்டு நாம் தமிழர் கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ? என்று தி.மு.க. எம்பி கனிமொழி கூறி இருப்பது தொடர்பாகவும், பாலியல் வழக்கு குறித்தும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:-

தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கனிமொழி கூறியுள்ள கருத்துக்கள் என்ன? அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தில் தொடங்கி பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது வரை கனிமொழி இதுவரை கருத்துக்களை தெரிவிக்காதது ஏன்?

இதுபோன்ற சூழலில் என்னை பாலியல் குற்றவாளி என்று சொல்வதற்கு நீங்கள் யார்? அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள்.

வழக்கு விசாரணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ச்சியாக அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள்.

என் மீது புகார் கொடுத்துள்ள விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 'என்ஜாய் மென்ட் 'வித் அவுட் ரெஸ்பான்ஸ்பிள்டி' என்று உங்களது தலைவர் பெரியார் தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன்.

அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில் தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறாகும்? இதற்கு கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் கட்சியும் ஒட்டுண்ணி போல ஒட்டிக் கொண்டு இரண்டு மூன்று சீட்டுகளுக்காக எதைப் பற்றியும் கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரையில் எந்த மக்கள் பிரச்சனைக்கும் அவர்கள் குரல் கொடுக்கா மல் மவுனம் சாதித்து வருகிறார்கள். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி எங்கே இருக்கிறது. இந்த நாட்டுக்கு அது தேவையான கட்சி தானா? திராவிடத்தை வீழ்த்த வந்த புலி நான். தமிழகத்தில் திராவிட கூட்டத்தை தவிர வேறு யாரும் காலூன்றிவிடக் கூடாது என்பதற்காகவே என்னை குறி வைத்துள்ளனர்.

கூட்டணியில் இருப்பதால் மயிலிறகையும் மல்லிகை பூவையும் வைத்துக் கொண்டு வருடி விடும் வேலையைத்தான் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன. கூட்டணியில் இருப்பதால் மீனவர் பிரச்சனைக்கும் ஆசிரியர்கள் பிரச்சனை என எந்த பிரச்சினையும் அவர்கள் குரல் கொடுப்பதே இல்லை.

மும்மொழி கொள்கையில் இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் வாயில் புண் இருக்கிறதா? இல்லை புற்று பாதித்துள்ளதா? இப்படி இருந்து கொண்டு என்னை பற்றி பேச அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

கம்யூனிஸ்டுகள் இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட்டுகளாக மாறிவிட்டார்கள் என்பதையே அவர்களின் செயல்பாடுகள் காட்டுகிறது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற என்னையும் சவுமியா அன்புமணியையும் குஷ்புவையும் முன்கூட்டியே கைது செய்தனர்.

அரசின் தவறை தட்டி கேட்கும் போராட்டம் அது என்பதாலேயே அதற்கு அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு கனிம வளங்கள் உள்ளே போவதை இந்த அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்படி இயற்கை வளங்களை காக்க முடியாத அரசாகவே இந்த அரசாங்கம் இருந்து வருகிறது.

இவ்வாறு சீமான் கூறினார்.

Tags:    

Similar News