தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதம்

Published On 2025-02-08 10:45 IST   |   Update On 2025-02-08 10:45:00 IST
  • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்தார்.
  • தொடர்ந்து அலுவலர்கள் சமாதானப்படுத்தி சீதாலட்சுமி முகவருக்கு முன் இருக்கையில் இடம் ஒதுக்கி கொடுத்தனர்.

ஈரோடு:

சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறையில் இருந்து கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணும் கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்கும் எண்ணும் பணி தொடங்கியது.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்தார். அவரது கட்சி முகவருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது முகவர் சீதாலட்சுமியிடம் கூறி உள்ளார்.

இதையடுத்து சீதாலட்சுமி இதுகுறித்து வாக்கு எண்ணும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அலுவலர்கள் சமாதானப்படுத்தி சீதாலட்சுமி முகவருக்கு முன் இருக்கையில் இடம் ஒதுக்கி கொடுத்தனர்.

அதன் பின்னர் அவர் உள்ளே சென்றார். இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News