தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 3-ம் இடம் பிடித்த நோட்டா

Published On 2025-02-08 11:07 IST   |   Update On 2025-02-08 11:07:00 IST
  • வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகள் கொண்டது.
  • வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.

ஈரோடு:

கடந்த 5-ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 46 பேர் போட்டியிட்டுள்ளனர். இருப்பினும் திமுக, நாம் தமிழர் கட்சியிடையே போட்டி நிலவியது.

இதனை தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகள் கொண்டது.

இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார். அவர் இதுவரை 27,640 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 4,107 வாக்குகள் பெற்றுள்ளார்.

இவர்களை தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் சொற்ப வாக்குகளே பெற்றுள்ளனர். இதனிடையே, இத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தொடர்ந்து நோட்டா 769 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. 

Tags:    

Similar News