தமிழ்நாடு
பெரியாரை சிறுமைப்படுத்துபவர்களை தண்டித்த மக்கள்- தமிமுன் அன்சாரி
- திமுக அபார வெற்றி பெற்றதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து.
- திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ள மற்றொரு 'பெரியார் விருது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், பெரியாரை சிறுமைப்படுத்துபவர்களை மக்கள் தண்டித்துள்ளனர் என்றும் நாதகவை அவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தமிமுன் அன்சாரி கூறுகையில், " பெரியாருடைய மண்ணில் அவரை சிறுமைப்படுத்துபவர்களை ஒரு எல்லைக்கோட்டில் வைத்து மக்கள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.
பெரியார் பிறந்து வளர்ந்த மண்ணில் திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ள மற்றொரு 'பெரியார் விருதாக' இதை கருதுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.