விஜயை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்தாரா பிரசாந்த் கிஷோர்?
- பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது.
- இன்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபைக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மேலும் அதற்கான வியூகங்கள் வகுக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. அரசியல் கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்திக்க உள்ள விஜய், தேர்தலை சந்திப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.
அதன்படி, நேற்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஒப்பந்தம் போட்டுள்ளார். இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து இன்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விஜயை நேற்று சந்தித்து பேசிய பின்னர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்றிரவு எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க.விற்காக பணி செய்ய சென்னை வந்துள்ள IPAC அணியினரையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.