தமிழ்நாடு

நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி பறிப்பு- போலீசார் விசாரணை

Published On 2025-03-05 08:01 IST   |   Update On 2025-03-05 08:01:00 IST
  • காரை மறித்து 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் எனக்கூறி ரூ.1 கோடியை பறித்து கொண்டு தப்பியோடி உள்ளனர்.
  • காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கேயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சம்மந்தம்பாளயைம் பிரிவு அருகே காரை வழி மறித்து நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூரை சேர்ந்த நகை வியாபாரி வெங்கேடஷ் (50) நகை வாங்க காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்த போது சம்மந்தம்பாளையம் பிரிவு அருகே காரை மறித்து 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் எனக்கூறி ரூ.1 கோடியை பறித்து கொண்டு தப்பியோடி உள்ளனர்.

ரூ.1 கோடியை பறித்து சென்ற சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News