தமிழ்நாடு

இஃப்தார் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

Published On 2025-03-04 18:59 IST   |   Update On 2025-03-04 18:59:00 IST
  • ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • உதயநிதி ஸ்டாலின் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் விழா மற்றும் இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.

இந்த விழாவில் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன், கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News