தமிழ்நாடு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Published On 2025-03-04 17:03 IST   |   Update On 2025-03-04 17:03:00 IST
  • 2022-ம் ஆண்டு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
  • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக்கூடாது எனக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக் கூடாது. இதனால் தமிழக அரசாணைக்கு தடைவிதிக்கக் கோரி உச்சநிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த மனுவில் எந்த பொதுநலனும் இல்லை எனத் தெரிவித்தது.

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன், அந்த இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, மக்கள் 100 யூனிட் மின்சார மானியத்தை பெற, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம் என்று அறிவித்திருந்தது. அதே வேளையில் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மானியம் நிறுத்தப்படாது என்றும் அறிவித்திருந்தது.

அதாவது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, யார் யாருக்கு மானியம் சென்றடைகிறது என்பது குறித்த தரவுகளைப் பராமரிக்கவே ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News