தமிழ்நாடு

கொரோனா காலத்தில் அதிக வட்டி: புகாரை பரிசீலிக்க ஆர்.பி.ஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2025-03-04 15:42 IST   |   Update On 2025-03-04 15:42:00 IST
  • கொரோனா காலத்தில் வங்கி கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
  • தனியார் வங்கிகள் அதிக வட்டி விதித்ததாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கொரோனா காலத்தில் பலர் வேலையை இழந்தனர். இதனால் வங்கிகளில் பெற்ற கடன் மற்றும் இ.எம்.ஐ-யை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு, வேலையின்மை ஆகியவற்றின் காரணமாக வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் வட்டியை தள்ளுபடி செய்ய வங்கிகள் மறுத்துவிட்டன. இ.எம்.ஐ. கட்ட காலஅவகாசம் வழங்கப்பட்டது. சில வங்கிகளில் வட்டிக்கு வட்டி என அதிக வட்டி வசூலித்தாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சாந்திகுமாரி என்பவர் கொரோனா காலத்தில் அதிக வட்டி விதித்ததாக தனியார் வங்கிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றதில் புகார் அளித்தார். இந்த புகார் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கொரோனா காலத்தில் அதிக வட்டி விகித்த தனியார் வங்கிக்கு எதிரான புகாரை 4 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News