தமிழ்நாடு

பா.ஜ.க.வுடன் கூட்டணியா? - சமாளித்து பதிலளித்த இ.பி.எஸ்.

Published On 2025-03-04 13:51 IST   |   Update On 2025-03-04 14:24:00 IST
  • கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
  • எங்களுடைய ஒரே இலக்கு தி.மு.க.வை வீழ்த்துவது மட்டும் தான்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

* இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

* தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

* மீனவர்கள் பிரச்சனைக்கு இருநாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அ.தி.மு.க. ஆட்சியில் மீனவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.

* கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

* தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆட்சியர், எஸ்.பி.யை மிரட்டுகிறார்.

* எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது.

* பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து அப்போது தெரிவிக்கப்படும்.

* தேர்தலுக்கு ஓராண்டு உள்ளது, அப்போது கூட்டணி குறித்து விவாதிக்கப்படும்.

* எங்களுடைய ஒரே இலக்கு தி.மு.க.வை வீழ்த்துவது மட்டும் தான்.

* தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. கூறியதா? என கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News