தமிழ்ப் பகைவர்கள் பா.ஜ.க. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
- இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு.
- மொழி திணிப்பு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை உலக சரித்திரத்தை புரட்டினால் தெரியும்.
சென்னை:
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மொழி சமத்துவமே தி.மு.க.வின் லட்சியம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
* இந்தியா ஒற்றை மொழி பேசும் நாடு அல்ல, அது பல்வேறு மொழி வழி தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றியம்.
* இந்தி மொழி மட்டுமே இந்திய நாட்டின் தேசிய மொழி என்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு.
* சமஸ்கிருதமே இந்தியாவின் மூல மொழி என்பது நம்மை அடிமையாக்கும் முயற்சி.
* மத்தியில் ஆள்பவர்கள் தமிழ் பகைவர்களாக உள்ளனர்.
* தமிழ் மீது மிகுந்த பற்று வைத்துள்ளதாக கூறும் பிரதமர் மோடி சமஸ்கிருதத்திற்கு ரூ.2,435 கோடி ஒதுக்கியுள்ளார்.
* 2014-2023 வரை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ரூ.167 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளனர்.
* நிதி ஒதுக்கீட்டில் உள்ள வேறுபாடே அவர்கள் தமிழ் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டு காட்டும்.
* இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு.
* இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிதான் இந்தி, அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக உள்ளது.
* மொழி திணிப்பு எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை உலக சரித்திரத்தை புரட்டினால் தெரியும்.
* தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் நிதி தராமல் ஆதிக்க மொழிகளை கொண்டு மத்திய பா.ஜ.க. அரசு அழிக்க துடிக்கிறது.
* தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை பேசுவோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது என்றார்.