மார்ச் 6 முதல் 9 வரை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியூர் புறப்படும், வரும் பயணிகள் கவனத்திற்கு...
- எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை விரைவு ரெயில் மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
- 8-ஆம் தேதி நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை கடற்கரை- எழும்பூர் இடையில் 4-ஆவது வழித்தட இணைப்பு பணிகள் காரணமாக எழும்பூர் ரெயில் நிலைய ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி,
காரைக்குடி- சென்னை எழும்பூர் இடையிலான பல்லவன் விரைவு ரெயில் மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
8-ஆம் தேதி நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேரமாக செங்கல்பட்டு- எழும்பூர் வரை ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு ரெயில் நிலையத்துடன் நின்றுவிடும்.
8-ஆம்தேதி புறப்படும் ஐதராபாத்- சென்னை தாம்பரம் சாமினார் எக்ஸ்பிரஸ் சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.
மண்டபத்தில் இருந்து 8-ஆம் தேதி இரவு புறப்படும் மண்டபம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (22662) தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
தூத்துக்குடியில் இருந்து 8-ஆம் தேதி புறப்படும் தூத்துக்குடி- சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மாம்பலம் வரை இயக்கப்படும்.
மண்டபத்தில் இருந்து 8-ஆம் தேதி மாலை புறப்படும் மண்டபம்- சென்னை (16752) எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை தாம்பரம் வரை இயக்கப்படும்.
புதுச்சேரியில் இருந்து 8ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் புதுச்சேரி- சென்னை எழும்பூர் (66052) மெமு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை விரைவு ரெயில் மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
எழும்பூரில் இருந்து புறப்படும் சேது விரைவு ரெயில் 8-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
9ஆம் தேதி (66051) சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி புறப்படும் மெமு ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
தாம்பரம்- ஐதராபாத் (12759) சாமினார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 9-ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.