உலகம்

மெக்சிகோவில் லாரி மீது பேருந்து மோதி விபத்து- 41 பேர் உயிரிழப்பு

Published On 2025-02-09 10:53 IST   |   Update On 2025-02-09 10:53:00 IST
  • பேருந்தில் இருந்த 38 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.
  • தேவையான உதவிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்துள்ளோம்.

தெற்கு மெக்சிகோவில் நேற்று அதிகாலையில் 48 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து கான்கன் மற்றும் டபாஸ்கோ இடையே சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக டபாஸ்கோ அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பேருந்தில் இருந்த 38 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். லாரியின் ஓட்டுநரும் உயிரிழந்தாக தெரிவித்தனர்.

தேவையான உதவிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாக டபாஸ்கோ மேயர் ஓவிடியோ பெரால்டா கூறினார்.

Tags:    

Similar News