உலகம்

காசாவின் முக்கிய பகுதியில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ்

Published On 2025-02-10 02:48 IST   |   Update On 2025-02-10 02:48:00 IST
  • போர்நிறுத்தம் அடிப்படையில் ஹமாஸ் போராளிகள் பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர்.
  • இஸ்ரேல் ராணுவமும் தங்கள் சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து வருகிறது.

டெல் அவிவ்:

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.

அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக்கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹமாஸ் போராளிகள் பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். இஸ்ரேல் ராணுவமும் தங்கள் சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து வருகிறது.

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியபோது வடக்கு காசாவில் இருந்த பாலஸ்தீனர்கள் தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்தனர். அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தது. அதன்படி ஏராளமான பாலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு காசாவையும் தெற்கு காசாவையும் இணைக்கும் நெட்சரிம் பகுதியில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டது என இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

Similar News