2வது சர்வதேச சுற்றுப் பயணம் - விரைவில் இந்தியா வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்
- இந்திய வருகை அவரின் இரண்டாவது சர்வதேச சுற்றுப் பயணமாக இருக்கும்.
- ஐரோப்பிய அரசாங்கங்களை ஜே.டி. வான்ஸ் கடுமையாக சாடியிருந்தார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை அதிபருடன் அவரது மனைவி உஷா வான்ஸூம் இந்தியா வரவுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த டிஜிட்டல் ஊடக நிறுவனமான பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த வகையில், அமெரிக்காவின் துணை அதிபராக அவர் மேற்கொள்ள இருக்கும் இரண்டாவது சர்வதேச சுற்றுப் பயணமாக அவரது இந்திய வருகை இருக்கும்.
முதல் சர்வதேச பயணத்தின் போது துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். உரையின் போது சட்டவிரோத குடியேற்றம், மத சுதந்திரம் மற்றும் தேர்தல் விவகாரங்கள் குறித்து ஐரோப்பிய அரசாங்கங்களை ஜே.டி. வான்ஸ் கடுமையாக சாடியிருந்தார். இவரது உரை உலகளவில் எதிர்வினைகளை ஏற்படுத்தி இருந்தது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை குறித்து அவர் பேசிய கருத்துக்கள் அமெரிக்க அரசுடன் நட்புறவு கொண்ட நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த உஷா வான்ஸ், தான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு முதல் முறையாக அமெரிக்காவின் 'Second Lady'-ஆக வருகை தரவுள்ளார்.