உலகம்
போர் நிறுத்தம் ஏற்பட புதிய பரிந்துரை வழங்கிய எகிப்து: இஸ்ரேல், ஹமாஸ் ஏற்குமா?

போர் நிறுத்தம் ஏற்பட புதிய பரிந்துரை வழங்கிய எகிப்து: இஸ்ரேல், ஹமாஸ் ஏற்குமா?

Published On 2025-03-24 18:41 IST   |   Update On 2025-03-24 18:41:00 IST
  • ஹமாஸ் அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதியுடன் உயிரோடுள்ள ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
  • இஸ்ரேல் காசா முனைக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைய அனுமதிக்க வேண்டும்.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் கடும் முயற்சி மேற்கொண்டன. இதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.

அப்போது காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி ஏழு வாரங்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. போர் நிறுத்தம் முடிவடைந்த பிறகு மேலும் போர் இடைநிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 7 வார போர் நிறுத்தம் முடிவடைந்த பின்னர், தொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. மனிதாபிமான உதவிகள் செல்ல தடைவிதித்தது.

இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரையை எகிப்து வழங்கியது. எகிப்து தனது பரிந்துரையில், "ஹமாஸ் உயிரோடுள்ள ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதில் அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதியுடன் அடங்குவார். அதற்குப் பதிலாக இஸ்ரேல் காசா முனைக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைய அனுமதிக்க வேண்டும். சில வாரங்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இஸ்ரேல் சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும்" குறிப்படப்பட்டுள்ளது.

இந்த போர் நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இதுவர 50,082 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,13,408 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News