உலகம்

அமெரிக்காவில் பரபரப்பு: டிரம்ப் கோல்ப் கிளப் அருகே மீண்டும் துப்பாக்கிச்சூடு

Published On 2024-09-15 19:57 GMT   |   Update On 2024-09-15 20:46 GMT
  • அதிபர் தேர்தலுக்காக டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
  • கோல்ப் மைதானத்தில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார். இதையடுத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

மேலும், அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஏற்கனவே, பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரு மாதங்களில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட 2வது தாக்குதல் முயற்சி இது என்பதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News