புதுச்சேரி
தபால் நிலையங்களில் ஆதார் திருத்த முகாம்
- அஞ்சலகத்திலும் பொதுமக்களின் நலன் கருதி 31-ந் தேதி வரை ஆதார் திருத்தம்
- பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பயனடையுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்
புதுச்சேரி:
புதுச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் துரை ராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பொதுமக்களின் நலன் கருதி 31-ந் தேதி வரை ஆதார் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல் போன்ற ஆதார் சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் உள்ளடக்கிய ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பயனடையுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.