புதுச்சேரி

கும்பாபிஷேகத்தையொட்டி அங்காளம்மன் கோவிலில் யாகசாலை பூஜை நடந்தபோது எடுத்த படம்.

அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-27 14:24 IST   |   Update On 2023-06-27 14:24:00 IST
  • கும்பாபி‌ஷேக விழா விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. முதல்கால யாக பூஜை நடைபெறுகிறது.
  • கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கோர்காடு கிராமத்தில் எல்லையம்மன் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட விநாயகர், பச்சைவாழியம்மன், அங்காளம்மன் மற்றும் பூரணி பொற்கலை உடனுறை அய்யனாரப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா இன்று காலை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. இன்று மாலை முதல்கால யாக பூஜை நடைபெறுகிறது.

நாளை  காலை 2-ம் கால யாக பூஜையும் அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News