புதுச்சேரி

பாகூர் ஏரி அதிகபட்ச கொள்ளளவையும் எட்டி கடல் போல் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

பாகூர் ஏரி அதிகபட்ச கொள்ளளவை எட்டியது

Published On 2022-09-13 15:07 IST   |   Update On 2022-09-13 15:07:00 IST
  • தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளப்பெருக்கால் சொர்ணாவூர் அணையி–லிருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்தது.
  • அதிகபட்ச நீர் சேமிக்கும் வகையில் அரங்கனூர் கலிங்கல் பகுதியில் 20 செ.மீ. உயரம் கொண்ட 2 தடுப்பு கட்டைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அமைத்தனர்.

புதுச்சேரி:

தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளப்பெருக்கால் சொர்ணாவூர் அணையி–லிருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்தது. இதனால் பாகூர் ஏரி 3 மீட்டரை தொட்டு முழு கொள்ளளவை எட்டி நீர் வழிந்தது.

இதையடுத்து அதிகபட்ச நீர் சேமிக்கும் வகையில் அரங்கனூர் கலிங்கல் பகுதியில் 20 செ.மீ. உயரம் கொண்ட 2 தடுப்பு கட்டைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அமைத்தனர். இதனால் பாகூர் ஏரி அதிகபட்ச கொள்ளளவான 3.60 மீட்டரை எட்டியது.

மேலும் பாகூர் சித்தேரி, உச்சிமேடு, மணப்பட்டு, கடுவனூர், ஆகிய 4 சிறிய ஏரிகளும் பருவமழைக்கு முன்னதாகவே நிரம்பி வழிந்து ஓடுகிறது.

பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள் நிரம்பியதால், மழைகாலத்திற்கு முன்பே வரத்து மற்றும் போக்குவாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

Tags:    

Similar News