புதுச்சேரி

மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி

சமூக அமைப்புகள் போராட்டம்

Published On 2022-06-20 15:07 IST   |   Update On 2022-06-20 15:07:00 IST
  • மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை வகித்தார்.

புதுச்சேரி:

மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழகம் லோகுஅய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், தமிழர் களம் அழகர், தமிழர் தேசிய முன்னணி தமிழ்மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், எஸ்.டி.பி.ஐ. கட்சி பரகத்துல்லா, தன்னுரிமை கழகம் சடகோபன், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பாரதியார் பல்கலைக் கூடத்தில் விதிகளை மீறி, சமூக இடஒதுக்கீடை பின்பற்றாமல் தமிழகத்தை சேர்ந்த உதவி பேராசியர்கள் பணி நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் மீது உயர்மட்ட விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்ய வேண்டும்.

கலை பண்பாட்டுத்துறை செயலரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

Tags:    

Similar News