என் மலர்tooltip icon

    ஆஸ்திரேலியா

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    சிட்னி:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஒலிவெட்டி ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன்-டிரிஸ்டன் ஜோடியுடன் மோதியது.

    இதில் ஆஸ்திரேலிய ஜோடி 6-2, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்றது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் லூகாஸ் பவுலே உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட்களில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் 6-3, 1-6, 7-5, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் முனாரை வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் உடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் பவுலா படோசா, சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார். இதில் படோசா 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

    சிட்னி:

    டென்னிஸ் உலகில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது.

    அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதினார்.

    இதில் தாமஸ் மச்சாக் 6-3, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா பங்கேற்கிறார்.

    சிட்னி:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று முதல் தொடங்க உள்ளது.

    இதற்கிடையே, பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் உடன் மோதுகிறார்.

    இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலென்கா ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார். இவர் கடந்த 2024 மற்றும் 2023-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்று வாகை சூடியிருந்தார்.

    ஏற்கனவே, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் 1997, 1998 மற்றும் 1999-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் இன்று விளையாட உள்ளார்.

    சிட்னி:

    டென்னிஸ் உலகில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.

    அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகல், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதுகிறார்.

    • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
    • இதில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெகா சாம்பியன் பட்டம் வென்றார்.

    பிரிஸ்பேன்:

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெகா, அமெரிக்காவைச் சேர்ந்த ரெய்லி ஒபெல்கா உடன் மோதினார்.

    இதில் ஜிரி லெஹெகா 4-1 என முதல் செட்டில் முன்னிலையில் இருந்தபோது, ரெய்லி ஒபெல்கா காயம் காரணமாக போட்டியில் இருந்து திடீரென விலகினார். இதனால் ஜிரி லெஹெகா சாம்பியன் பட்டம் வென்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலிய அணி பார்டர்-கவாஸ்கர் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • சொந்த மண்ணில் கடந்த தொடர்களில் கண்ட தோல்விக்கு கம்மின்ஸ் தலைமை பதிலடி கொடுத்துள்ளது.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது.

    இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் மீண்டு வந்து தொடரை 3-1 என்ற கணக்கில் (ஒரு போட்டி டிரா) கைப்பற்றி அசத்தியது. மேலும், சொந்த மண்ணில் கடந்த 2 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களில் கண்ட தோல்விக்கு தற்போது கம்மின்ஸ் தலைமையில் பதிலடி கொடுத்துள்ளது.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வழங்க தன்னை அழைக்கவில்லை என இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன.

    நான் மைதானத்தில்தான் இருந்தேன். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால் கோப்பை வழங்க விரும்பமாட்டேன் என்றெல்லாம் கிடையாது. அவர்கள் நன்றாக விளையாடியதால் வெற்றி பெற்றார்கள். இந்தியராக இருப்பதால் ஆலன் பார்டருடன் இணைந்து கோப்பையை வழங்கியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்றார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு நிர்வாகி ஒருவர் கூறுகையில், தொடரை இந்தியா வென்றால் கவாஸ்கரும் ஆஸ்திரேலியா வென்றால் ஆலன் பார்டரும் கோப்பையை வழங்கவேண்டும் என திட்டமிட்டிருந்தோம். இதன்படி கம்மின்சிடம் கோப்பையை வழங்கினார் பார்டர். இந்த விபரம் கவாஸ்கருக்கு தெரியாததால் கோபம் அடைந்திருக்கலாம் என தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் பொலினா குடர்மெட்ரோவா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா முதல் செட்டை 4-6 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா சாம்பியன் பட்டம் பெறுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா 2வது இன்னிங்சில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலியாவின் போலண்ட் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    சிட்னி:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் சுருண்டது. வெப்ஸ்டர் 57 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 3 விக்கெட்டும், பும்ரா, நிதிஷ்குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    4 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சிராஜ் மற்றும் பும்ரா விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில் இந்தியா 2வது இன்னிங்சில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 6 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.

    சிட்னி:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் போலன்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் சுருண்டது. வெப்ஸ்டர் 57 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 3 விக்கெட்டும், பும்ரா, நிதிஷ்குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    4 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் தனது வழியில் அதிரடியாக விளையாடினார். ஸ்டார்க் ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதம் அடித்த அவர் 61 ரன்களில் (33 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், அதிரடியாக விளையாடி அரை சதமடித்த ரிஷப் பண்டுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஸ்டிரைக் ரேட் 50 அல்லது அதற்கும் குறைவாக பேட் செய்த ஆடுகளத்தில், ரிஷப் பண்ட் 184 ஸ்டிரைக் ரேட் உடன் ஆடியது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒன்று. அவர் முதல் பந்தில் இருந்து ஆஸ்திரேலியாவைத் திணறடித்தார். அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது எப்போதும் சிறப்பாக இருக்கிறது. என்ன ஒரு அபாரமான இன்னிங்ஸ் என பதிவிட்டுள்ளார் .

    • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் ஓபெல்கா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா, பிரான்சின் பெரிகார்ட் உடன் மோதினார்.

    இதில் ஓபெல்கா 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் ஓபெல்கா, செக் குடியரசின் ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.

    ×