search icon
என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • கொரோனா காலத்தில் கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கோவில் சார்பில் தினமும் மதியம் உணவு வழங்கப்பட்டது.
      • அவ்வப்போது மாணவ-மாணவிகளை அழைத்து பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

      தென்காசி:

      கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

      அகத்தியர், தேரையர் தங்கி வழிபாடு நடத்திய தலம். அகத்தியர் இங்குதான் முதன்முதலி்ல் பல்கலைக்கழகம் போல் பாடசாலை அமைத்தார். முதன்முதலாக கபால அறுவை சிகிச்சை நடந்த இடமும் இதுதான்.

      இக்கோவிலில் தைப்பூசம் விழா விமரிசையாக நடைபெறும். மேலும் வைகாசி விசாகம், தமிழ்புத்தாண்டு, தமிழ்மாத கடைசி வெள்ளி வழிபாடு, பவுர்ணமி கிரிவலம், கிருத்திகை பூஜை போன்ற வையும் சிறப்பாக நடை பெறும்.

      இங்கு தினமும் மதியம் அன்னதானம் நடந்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக் கிழமை, தமிழ் மாத கடைசிவெள்ளி, பவுர்ணமி நாளில் காலையில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

      இக்கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் ஆன்மிகப்பணியோடு அறப்பணியையும் செய்து வருகிறார். கடைசி வெள்ளி அன்று விவசாயம் செழிக்க வருண கலச பூஜை நடத்தப்படுகிறது. தமிழ்புத்தாண்டு அன்று சிறந்த சமூக சேவகர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப்படுகிறது.

      கொரோனா காலத்தில் கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கோவில் சார்பில் தினமும் மதியம் உணவு வழங்கப் பட்டது. மேலும் பொதுநல ஊழியர்களுக்கு முக்கசவசம், கிருமி நாசினியும் இலவசமாக வழங்கப்பட்டது.

      கோவிலுக்கு வரும் பக்தர்கள் இறைஅருளோடு பொது அறிவையும் பெற்றுச் செல்லும் வகையில் நூல்நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

      அங்கு ஆன்மிக புத்தகங்கள் மட்டுமின்றி, பொதுஅறிவு நூல்களும், போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளன. மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு பயிற்சியும் அவ்வப்போது அளிக்கப்படுகிறது.

      மேலும் காவல்துறை, ராணுவம் போன்ற பணிகளுக்கு செல்ல விரும்புவோருக்காக உடற்பயிற்சி மைதானமும் அமைக்கப்பட்டு உள்ளது.

      அவ்வப்போது பக்கத்து ஊர்களில் இருக்கும் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.

      கடந்த கோடை விடுமுறையின்போது ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி, விளை யாட்டுப்போட்டி, கிராமிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

      தோரணமலை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன் - ஆ சந்திரலீலா வாழ்ந்த வீட்டை முத்துமாலைபுரத்தில் இலவச மாலை நேர படிப்பகமாக மாற்றி மாணவ- மாணவிகள் பயன் பெரும் வகையில் உருவாக்கியுள்ளார்கள் .

      அதேபோல் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஊர் இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உலக சுற்றுலாத்தினத்தையொட்டி கடந்த 24-ந் தேதி சுற்றுலாத் துறையும், தோரணமலை நிர்வாகமும் இணைந்து மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் தோரணமலை கோவில் நடத்தப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

      இதில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்ப கராமன் செய்திருந்தார்.

      • பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக்கொண்டார்.
      • கூட்டத்தில் பட்டாமாறுதல் உள்பட 527 மனுக்கள் பெறப்பட்டது.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக்கொண்டார்.

      இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 527 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஷேக், மாவட்ட உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

      • கலைஞர் உரிமைத்தொகை பலருக்கு கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
      • தொலைபேசி எண்கள் இல்லாமல் முதியவர்கள் பலருக்கும் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

      தென்காசி:

      தமிழ்நாடு அரசின் சார்பில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

      ரூ. 1000 உரிமைத்தொகை

      இருப்பினும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பெண்கள் அந்நிறுவனங்களின் சார்பில் ஓய்வு தொகையைப் பெற்று வந்தாலும் தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்படும் கலைஞர் உரிமைத்தொகை ரூ. 1000 பலருக்கும் கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக எவ்வித ஓய்வூதிய மும் பெறாமல் இருந்து வரும் வயதான முதியவர்கள் பலருக்கும் தொலைபேசி எண்கள் எதுவும் இல்லாமல் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

      மூதாட்டி கோரிக்கை

      அதன்படி நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மந்தியூர் ஊராட்சி பிள்ளை யார்குளம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மூதாட்டிகள், முன்னர் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டதன் காரணமாக அதற்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 700 பெற்று வருகிறோம்.

      ஆனால் தற்போது தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் கலைஞர் உரிமைத்தொகை ரூ. 1000 பெறுவதற்கு பதிவு செய்தி ருந்தும் கிடைக்கவில்லை. எனவே பீடி தொழிலாளர்க ளாகிய வயதான எங்களுக்கு ஆயிரம் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கலெக்டர் ரவிச்சந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.

      • ஆலங்குளம் அருகே மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
      • நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும்.

      ஆலங்குளம்:

      நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 90 சதவீதம் சாலைப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணியையும் முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

      இப்பணிகளின் ஒரு பகுதியாக, ஆலங்குளம் அருகே மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

      இங்கு சுங்கச்சாவடி அமைக்க வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

      இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவரும், அமைப்பின் தென்காசி மாவட்ட தலைவருமான டி.பி.வி. வைகுண்டராஜா நிருபர்க ளிடம் கூறியதாவது:- ஆலங்குளம் அருகே மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் பலமுறை கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரி வித்தோம். இதை பொருட்ப டுத்தாமல் சுங்கச்சாவடி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

      நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். புதிதாக எந்த சாலையும் அமைக்காமல் பழைய சாலையின் இருபுறமும் சற்று விரிவாக்கம் செய்து, சுங்கச்சா வடி அமைத்து சுங்க கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பானது.

      மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலித்தால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். அனைத்து பொருட்களின் விலையும் உயரும். எனவே சுங்கச்சாவடி அமைப்பதை நிறுத்த வேண்டும். அதையும் மீறி அமைத்தால் எதிர்த்து சட்டப் பூர்வமான போராட்டம் நடத்துவோம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • ஆலமரத்தின் அடிப்பகுதி தீ பிடித்து எரிந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
      • ஆலமரத்தின் பெரிய கிளை அருகில் இருந்த மின்கம்பத்தில் விழுந்தது.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் வடக்கு பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இந்நிலையில் அந்த வழியே சென்ற பொதுமக்கள் ஆலமரத்தின் அடிப்பகுதி புகையுடன் தீ பிடித்து எரிந்ததை பார்த்துள்ளனர். இது குறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் ரமேஷ்,போக்குவரத்து பாலசந்தர் சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன், வீரர்கள் மாடசாமி, சமுத்திரபாண்டி, குமார், சவரணகுமார் மற்றும் வீரர்கள் ஆலமரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்தால் ஆலமரத்தின் பெரிய கிளை ஒன்று அருகில் இருந்த மின்கம்பத்தில் விழுந்ததால் மின் வயர்கள் அறுந்து ஐந்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தது. உடனடியாக அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். கீழப்பாவூரில் பழமை வாய்ந்த ஆலமரம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

      • சமுதாய வளைகாப்பு விழா வாசுதேவநல்லூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
      • பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கினார்.

      சிவகிரி:

      சிறப்பு மருத்துவ மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா வாசுதேவநல்லூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கினார். வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

      நிகழ்ச்சியில் யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், முன்னாள் கவுன்சிலர் செல்வம், சுந்தர், உள்ளார் விக்கி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி, மேற்பார்வையாளர்கள் அமுதா, சுகந்தி, பணியா ளர்கள் காளியம்மாள் (மகளிர் தொண்டர் அணி), இந்திரா, சீனியம்மாள், முத்துமாரி, துரைகண்மீரால், பரமேஸ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • சின்ன கோவிலான்குளம் கிராமத்தில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டது.
      • ஆராய்ச்சி மைய கட்டிடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

      சங்கரன்கோவில்:

      தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன கோவிலான்குளம் கிராமத்தில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அந்த ஆராய்ச்சி மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

      கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

      தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி எம்.பி. தனுஷ் குமார், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலை குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் முன்னிலை வகித்தனர்.

      இதில் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வெள்ளாட்டின ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்தார்.

      இதில் கால்நடை மருத்துவர் துறை மண்டல துணை இயக்குனர் ரோஜர், கால்நடை மருத்துவர் மலர்கொடி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கே எஸ் எஸ் மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் உலக அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
      • மாணவ-மாணவிகளுக்கு, எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது.

      சங்கரன்கோவில்:

      ஸ்கூல் கேம் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவிலான யோகா போட்டி கடந்த 17-ந் தேதி மதுரை பாத்திமா கல்லூரியில் நடைபெற்றது. இதில் வீ.கே.புதூர் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 40 பேர் கலந்து கொண்டனர். அதில், 26 பேர் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்று நவம்பர் மாதம் நடக்க உள்ள உலக அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

      தேர்வான மாணவ-மாணவிகள் தங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.வை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர். அவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி கல்வி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு, எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர்கள் மருதுபாண்டி, ரேவதி, மூர்த்தி, கணேஷ், ஜெயக்குமார், கார்த்தி, வக்கீல் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • காசிவிஸ்வநாதர் கோவிலில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பெயரில் அர்ச்சனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.
      • கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

      தென்காசி:

      பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பெயரில் அர்ச்சனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.

      அதனை தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொரு ளாளர் சுப்பிரமணியன், மாநில துணைச் செயலாளர் டேவிட் நாடார், துணை செயலாளர் திருமலைகுமார், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், உடையார், சாம்பவர்வடகரை கிளை தலைவர் மோகன், பரமசிவன், இசக்கிமுத்து நாடார், முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      • ராமநாதபுரம் பஞ்சாயத்து வளாகத்தி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
      • பேரணியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் பஞ்சாயத்து வளாகத்தில் பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு நெல்லை வன கோட்ட தமிழ்நாடு வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வனச்சரக அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். நெல்லை கோட்ட வன அலுவலர் அன்பு முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ராஜகோபாலன் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பேரணியை தென்காசி எம்.பி. தனுஷ் குமார், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மதிமாரி முத்து, ராமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணைத்தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வனவர் பிரவீன் நன்றி கூறினார்.

      • போட்டியில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
      • 74 கிலோ எடை பிரிவில் சுதர்சன் தங்கப்பதக்கம் வென்றார்.

      ஆலங்குளம்:

      தமிழ்நாடு பவர் லிப்டிங் கழகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி கோவையில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆலங்குளத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுதர்சன் என்ற கல்லூரி மாணவன் 74 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு 125 கிலோ தூக்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். எளிமையான குடும்பத்தை சேர்ந்த இந்த மாணவன் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

      மேலும் தற்போது ஆலங்குளம் தினசரி காய்கனி சந்தை மார்க்கெட்டில் இரவு நேரத்தில் வேலை பார்த்து கொண்டு வீரவநல்லூர் தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியர் படிப்பு படித்து வருகிறார். இவர் கொரோனா காலகட்டத்தில் இருந்து கடந்த 2 ஆண்டு காலமாக தினசரி காய்கனி சந்தையில் வேலை செய்து கொண்டு பயிற்சி பெற்று குறுகிய காலகட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஆலங்குளம் காய்கனி சந்தை மார்க்கெட் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

      • விழாவில் மழலையர் வகுப்பு மாணவ- மாணவிகளின் வரவேற்பு நடனம் நடை பெற்றது.
      • பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

      தென்காசி:

      இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 33-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர் கோவை மல்லெர் பல் மருத்துவமனையின் தலைமை பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் திருமலைவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவி ஹர்சிதாஸ்ரீ வரவேற்று பேசினார். மழலையர் வகுப்பு மாணவ- மாணவிகளின் வரவேற்பு நடனம் நடை பெற்றது. மாணவி ஸ்வேதா விழாவை தொகுத்து வழங்கினார்.

      ஆலோசகர் உஷா ரமேஷ் பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். பாரத்கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

      செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதா பிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றுச் சாதனை புரிந்த மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

      கடந்த 2022 - 2023-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயின்ற மாணவ -மாணவிகளுக்கு கல்வியில் முதலிடம் மற்றும் 2-ம் இடம் பெற்றவர்களுக்கு தேர்ச்சிக்கான விருதும், பல்துறை விருது, உத்வேக விருது, வருகை பதிவேட்டிற்கான விருது போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் திருமலை வேலு சிறப்புரையாற்றினார்.

      மாணவி சந்திய பிரியா நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பாரத்கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

      ×