என் மலர்
கார்
- ஹூண்டாய் பிராண்டின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் குறிப்பிட்ட மாடல்கள் விலை முன்பை விட அதிகரித்துள்ளது.
- வாடிக்கையாளர்கள் ஏழு வண்ணங்கள் மற்றும் இரண்டு வேரியண்ட்களில் தேர்வு செய்யும் வசதி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அதன் தயாரிப்பில் வெளிவந்துள்ள பல மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது i20 N லைன் இணைந்துள்ளது. ஹூண்டாய் பிராண்டின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் குறிப்பிட்ட மாடல்கள் விலை முன்பை விட அதிகரித்துள்ளது.
i20 N லைன் காரின் விலை குறிப்பிட்ட மாடல்களுக்கு ரூ. 4,000 அதிகரித்துள்ளது. என்ட்ரி லெவல் N6 MT மற்றும் N6 MT டூயல்-டோன் வேரியண்ட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ.4,000 அதிகரித்துள்ளது.

ஹூண்டாய் i20 N லைனின் விலை இப்போது ரூ. 9.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.56 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் கொண்ட 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ஏழு வண்ணங்கள் மற்றும் இரண்டு வேரியண்ட்களில் தேர்வு செய்யும் வசதி உள்ளது.
- XEV9e மற்றும் BE6 மின்சார கார்கள் 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன.
- மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.
மஹிந்திராவின் புதிய EV மாடல்களான XEV9e மற்றும் BE6, விற்பனைக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட முதல் நாளே 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன. இதன் முன்பதிவு மதிப்பு மட்டும் ரூ.8,472 கோடி (Ex-Showroom) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e மின்சார கார்கள் 170kW மோட்டார் 59kWh பேட்டரி மற்றும் 210kW மோட்டார் 79kWh பேட்டரி என்று 2 மாடல்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மொட்டரின் டார்க்விசை 380Nm ஆகும்.
மஹிந்திரா BE 6 காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):
பேக் ஒன்று 59kWh - ரூ. 18.90 லட்சம்
பேக் ஒன்றுக்கு மேல் 59kWh - ரூ. 20.50 லட்சம்
பேக் 2 59kWh - ரூ. 21.90 லட்சம்
பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 24.50 லட்சம்
பேக் 3 79kWh - ரூ. 26.90 லட்சம்
மஹிந்திரா XEV 9e காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):
பேக் 1 59kWh - ரூ. 21.90 லட்சம்
பேக் 2 59kWh - ரூ. 24.90 லட்சம்
பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 27.90 லட்சம்
பேக் 3 79kWh - ரூ. 30.50 லட்சம்
மஹிந்திரா BE 6 மற்றும் மஹிந்திரா XEV 9e மின்சார கார்களின் பேக் 3 மாடல் இந்தாண்டு மார்ச் மாதத்திலும் பேக் 3 செலக்ட் மாடல் ஜூன் மாதத்திலும் பேக் 2 மாடல் ஜூலையிலும் பேக் 1 மற்றும் பேக் ஒன்றுக்கு மேல் மாடல் ஆகஸ்டிலும் டெலிவரி செய்யப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகியுடன் கியா மோட்டார்ஸ் போட்டியிட்டு வருகிறது.
- கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் சோனெட் எஸ்யூவிகள் அதிக அளவில் இந்தியாவில் விற்பனை
தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் 155 மில்லியன் டாலர் (ரூ.1,354 கோடி) அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கியா மோட்டார்ஸ் இந்தியா சொகுசு கார்னிவல் மினிவேனின் அசெம்பிளிக்கான உதிரிப்பாகங்களின் இறக்குமதியில் தவறான தகவல்களை தெரிவித்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது .
கியா கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியா இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு இந்திய அரசு அதிகமான இறக்குமதி வரி விதிப்பதாக டெஸ்லா நிறுவனம் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தது.
இந்தியாவின் வாகன சந்தையில் ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகியுடன் கியா மோட்டார்ஸ் போட்டியிட்டு வருகிறது. கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் சோனெட் எஸ்யூவிகள் அதிக அளவில் இந்தியாவில் விற்பனை ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- நிசான், ஹோண்டா ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
- நிசானின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விரைவில் கூடி பேசவுள்ளனர்.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான நிசான் மற்றும் ஹோண்டா ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது .
ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மற்றும் ஹோண்டா ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உலகின் 3 ஆவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஹோண்டா உடனான இணைப்பு பேச்சுவார்த்தையை கைவிட நிசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நிசானின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விரைவில் கூடி நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியில் பரவியவுடன் ஹோண்டா மற்றும் நிஸானின் பங்குகள் கணிசமான உயர்வை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான e-Vitara காரின் ஃபர்ஸ்ட் டீசரை கடந்த மாதம் வெளியிட்டது.
- மின்சார எஸ்யூவியின் உற்பத்தி அடுத்த மாதம் முதல் Suzuki Motor Gujarat Private Limited ஆலையில் தொடங்கும்.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான e-Vitara காரின் ஃபர்ஸ்ட் டீசரை கடந்த மாதம் வெளியிட்டது.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாருதி சுசுதி நிறுவனம் தனது முதல் மின்சார காரன இ-விட்டாராவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ.17 லட்சம் முதல் ரூ.26 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கென பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் HEARTECT e-platform என்ற பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார எஸ்யூவியின் உற்பத்தி அடுத்த மாதம் முதல் Suzuki Motor Gujarat Private Limited ஆலையில் தொடங்கும். இது ஜூன் மாதத்திற்குள் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹோண்டா மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
- இந்த காரின் தொடக்க விலையாக 77 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து, ஜப்பானின் சோனி தயாரிக்கும் அஃபீலா ஏ1 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்தமுன்பதிவு கலிபோர்னியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ளது. இது 2026 முதல் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற உலகளாவிய சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.
இது ஹோண்டா மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
இந்த காரின் தொடக்க விலையாக 77 லட்ச ரூபாயும், ப்ரீமியம் ரக கார் 88 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் காரில் 482 bhp ஆற்றலை வழங்கும் இரட்டை மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 91kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியில் 150kW வேகத்தில் வேகமாக சார்ஜ் செய்யலாம். இதில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 483 கிமீ தூரம் வரை செல்லலாம்.
- டிஃபென்டர் வி8 கார் 90, 110 மற்றும் 130 என மூன்று Body style-களில் கிடைக்கிறது.
- X-Dynamic HSE & X என இரண்டு வேரியண்ட்களில் டிஃபென்டர் வி8 கார் சந்தையில் அறிமுகமானது.
2024 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட V8 இன்ஜினை மீண்டும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் டிஃபென்டர் வரிசையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய டிஃபென்டர் வி8 கார் 90, 110 மற்றும் 130 என மூன்று Body style-களிலும் X-Dynamic HSE & X என இரண்டு வேரியண்ட்களில் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
இந்த காரின் என்ஜின் 426 ஹெச்.பி. பவர், 610 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
டிஃபென்டர் வி8 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை:
1. டிஃபென்டர் 110 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்-டைனமிக் எச்.எஸ்.இ.: ரூ 1.39 கோடி
2. டிஃபென்டர் 90 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்: ரூ 1.42 கோடி
3. டிஃபென்டர் 110 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்: ரூ 1.49 கோடி
4. டிஃபென்டர் 130 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்-டைனமிக் எச்.எஸ்.இ.: ரூ 1.54 கோடி
5. டிஃபென்டர் 130 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்: ரூ 1.64 கோடி
- கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார்கள் பட்டியல் வெளியானது.
- ஆண்டு அதிகம் விற்பனையான கார் என்ற சாதனை.
ஒரே ஆண்டில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான கார் மாடல் என்ற சாதனையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பன்ச் பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை டாடா பன்ச் பெற்றுள்ளது.
இதுதவிர கடந்த 40 ஆண்டுகளாக மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல் வருடாந்திர விற்பனையில் முதலிடத்தில் இருந்து வந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், டாடா பன்ச் நிறுவனம் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் என்ற சாதனையை படைத்துள்ளது.

கடந்த 2024 ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் 2.02 லட்சம் யூனிட்கள் விற்பனையானது. இதே காலக்கட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடல் 1.90 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.
இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா மாடலும், நான்காவது இடத்தில் மாருதி பிரெஸ்ஸா மாடலும் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஐந்தாவது இடம் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் பெற்றுள்ளது.
2024 இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் டாப் 5 பட்டியல்:
டாடா பன்ச்: எஸ்.யு.வி. பிரிவில் விற்பனை செய்யப்படும் டாடா பன்ச் மாடல் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 02 ஆயிரத்து 030 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது.
மாருதி சுசுகி வேகன் ஆர்: மாருதியின் ஹேச்பேக் மாடலான வேகன் ஆர் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 90 ஆயிரத்து 855 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
மாருதி சுசுகி எர்டிகா: இந்திய சந்தையில் பிரபல எம்.யு.வி. மாடல்களில் ஒன்றான எர்டிகா கடந்த ஆண்டு 1 லட்சத்து 90 ஆயிரத்து 091 யூனிட்கள் விற்பனையானது.
மாருதி சுசுகி பிரெஸ்ஸா: மாருதி சுசுகியின் பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மாடல் கடந்த ஆண்டு 1 லட்சத்து 88 ஆயிரத்து 160 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
ஹூண்டாய் கிரெட்டா: இந்திய சந்தையில் பிரபல எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்று கிரெட்டா. இந்த மாடல் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 86 ஆயிரத்து 919 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது.
- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
- 9.87 சதவீதம் பெட்ரோல்- சி.என்.ஜி., ஹைப்ரிட் மாடல்கள்.
உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு கணிசமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டுகளில் ஒப்பிடும் போது, வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், பல்வேறு முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் பல்வேறு புது மாடல்களை எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் அறிமுகம் செய்து வருகின்றன.
அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வ் எலெக்ட்ரிக், டாடா பன்ச் எலெக்ட்ரிக், மஹிந்திரா நிறுவனத்தின் BE 6E, XEV 9e, எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் வின்ட்சர், கியா நிறுவனத்தின் EV9 உள்பட பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யபபட்டுள்ளன. இவைதவிர ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களின் மேம்பட்ட வெர்ஷன்களும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தை 2024 ஆம் ஆண்டில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி எலெக்ட்ரிக் வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 26.5 சதவீதம் அதிகரித்து 1.94 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதனை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1.5 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இது, நாட்டின் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை 7.46 சதவீதமாக உயர்த்தியது. இது 2023 ஆம் ஆண்டு 6.39 சதவீதமாக இருந்தது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வரும் போதிலும், பெட்ரோல் வாகனங்கள் ஆதிக்கம் தொடர்கிறது. இந்த ஆண்டு விற்பனையான ஒட்டுமொத்த (26.04 மில்லியன்) வாகனஹ்களில் 73.69 சதவீதம் (19.18 மில்லியன்) யூனிட்கள் பெட்ரோல் மாடல்கள் ஆகும்.
இதில் 10.5 சதவீதம் (2.62 மில்லியன்) யூனிட்கள் டீசல் மாடல்கள், 9.87 சதவீதம் பெட்ரோல்- சி.என்.ஜி., ஹைப்ரிட் மாடல்கள் ஆகும். 2024 ஆண்டு விற்பனை செய்யப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் வாகனத்திற்கு இணையாக 12.43 பெட்ரோல்-சி.என்.ஜி, ஹைப்ரிட், டீசல் மாடல்கள் அடங்கும்.

மாதாந்திர விற்பனை:
இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முறையே 1,45,064 மற்றும் 1,41,740 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மார்ச் மாதத்தில் 2,13,068 யூனிட்களாக அதிகரித்தது. பிறகு ஏப்ரல், மே மாதங்களில் குறைந்து 1,15,898 மற்றும் 1,40,659 யூனிட்களாக இருந்தது. ஜூன் மாதத்தில் 1,40,137 யூனிட்கள் விற்பனையானது.
2024 ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையானது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2,19,482 யூனிட்கள் விற்பனையானது. இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிக வாகனங்கள் விற்பனையா மாதமாக அமைந்தது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த எண்ணிக்கை 1,92,575 மற்றும் 1,32,302 யூனிட்களாக சரிந்தது.
எனினும், இந்த ஆண்டு முழுக்க ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறைந்தபட்சம் ஒரு லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாகவே இருந்துள்ளது.

மத்திய அரசு திட்டம்:
இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்து ஃபேம் 2 திட்டம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1,15,898 யூனிட்களாக சரிந்தது.
இதன் பிறகு, பண்டிகை காலம் மற்றும் பிரதமரின் இ-டிரைவ் திட்டம் காரணமாக மீண்டும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து சாதனை படைத்தது. நடப்பு நிதியாண்டில் எஞ்சியுள்ள காலக்கட்டத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வாகன உற்பத்தியாளர்கள் சமீப காலங்களில் அறிமுகம் செய்துள்ள புதிய மாடல்கள் மற்றும் புத்தாண்டு பிறப்பை ஒட்டி வாகன விற்பனை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
- அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று மேக்னைட்.
- இந்த கார் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், இந்த ஆண்டு ஏராளமான கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2024 ஆண்டு துவக்கமே, கார் மாடல்கள் விலை ஏற்றத்துடன் துவங்கியது. எனினும், அதன்பிறகு முன்னணி கார் பிராண்டுகள் புதிய கார் மாடல்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்தன.
பதிய கார் மாடல்களில் சில கார்கள் ஏற்கனவே செய்யப்பட்ட மாடல்களின் வருடாந்திர அப்டேட் செய்யப்பட்டவைகளாக இருந்தன. சில மாடல்கள் ஏராளமான மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. எதுவாயினும், இந்த ஆண்டு அறிமுகமானதில், பிரபல கார் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
கியா கார்னிவல்:
கியா இந்தியா நிறுவனம் தனது கார்னிவல் எம்.பி.வி. மாடலை அதிகளவு மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த காரில் ஏராளமான மாற்றங்களுடன் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

நிசான் மேகனைட்:
இந்திய சந்தையில் நிசான் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று மேக்னைட். இந்த மாடலின் புது வெர்ஷனும் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் ஒட்டுமொத்த டிசைன் மாற்றப்பட்டு, புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்கோடா கைலக்:
இந்தியாவில் ஸ்கோடா விற்பனை செய்யும் குறைந்த விலை எஸ்.யு.வி. மாடலாக கைலக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அசத்தலான டிசைன் மற்றும் ஏராளமான அம்சங்களுடன் ஸ்கோடா கைலக் மாடல் வெளியிடப்பட்டது.
கியா EV9:
கியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலாக EV9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாக்ஸி டிசைன் கொண்டிருக்கும் கியா EV9 ஏராளமான கனெக்டெட் அம்சங்களுடன் கிடைக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

டாடா கர்வ்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வ் மாடலின் ஐ.சி. எஞ்சின் வெர்ஷன் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் அறிமுக விலை ரூ. 10 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்:
இந்த ஆண்டு துவக்கத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா 2024 ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்தது. ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மஹிந்திரா XUV 3XO:
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக XUV 3XO அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய கேபின் டிசைன் கொண்டிருக்கும் XUV 3XO இரட்டை 10.25 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இத்துடன் அதிநவீன வசதிகள் மற்றும் அம்சங்களை புதிய மஹிந்திரா XUV 3XO கொண்டுள்ளது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசையர்:
2024 மாருதி சுசுகி டிசையர் மாடல் முற்றிலும் புதிய தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த காரின் விலை ரூ. 6.79 லட்சத்தில் துவங்கி ரூ. 10.14 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- நிசான் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கவுள்ளது.
- சீனாவில் ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்து வருகின்றன.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான நிசான் மற்றும் ஹோண்டா ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மற்றும் ஹோண்டா ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உலகின் 3 ஆவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாறவுள்ளது.
நிசான் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கவுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நிறுவனம் ஆகஸ்ட் 2026 இல் டோக்கியோ பங்குச் சந்தையின் பிரைம் சந்தையில் பட்டியலிடப்படும் என்று சொல்லப்படுகிறது.
சீனாவில் ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த 2 நிறுவனங்களின் இணைப்பும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.
- காரின் விலையை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி.
மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான e-Vitara காரின் ஃபர்ஸ்ட் டீசரை நேற்று வெளியிட்டது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் தொடங்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் நிறுவனம் இதனை அறிமுகப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியானது ஜனவரி 17 முதல் 22 வரை நடைபெறுகிறது. இந்த மின்சார எஸ்யூவி வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா EV உடன் போட்டியிடும்.
நிறுவனத்தின் தாய் நிறுவனமான Suzuki Motor Corporation, இந்த ஆண்டு அக்டோபரில் இத்தாலியின் மிலனில் நடைபெற்ற மோட்டார் ஷோவான EICMA-2024 இல் உலகளாவிய சந்தையில் இதை வெளிப்படுத்தியது. e-Vitara என்று அழைக்கப்படும், இது நடுத்தர அளவிலான மின்சார SUV EVX இன் production version ஆகும், இது முதலில் Auto Expo-2023ல் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் Global Mobility Show-2025இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த மின்சார எஸ்யூவியின் உற்பத்தி பிப்ரவரி-2025 முதல் Suzuki Motor Gujarat Private Limited ஆலையில் தொடங்கும். இது ஜூன் மாதத்திற்குள் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இ-விட்டாரா ஒய்-வடிவ LED ஹெட்லேம்ப்கள், இணைக்கப்பட்ட டெயில்லேம்ப்கள் மற்றும் தடிமனான பின்புற பம்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்னர், சார்ஜிங் போர்ட் முன் இடது ஃபெண்டரில் வைக்கப்படுகிறது. பின்புற கதவு கைப்பிடிகள் சி-பில்லரில் அமைந்துள்ளன.
மேலும், இ-விட்டாராவில் இரட்டை டேஷ்போர்டு திரைகள், வயர்லெஸ் சார்ஜர், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, காற்றோட்டமான முன் இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்ட் செயல்பாடு மற்றும் லெவல் 2 ஏடிஏஎஸ் பேக் செய்யப்பட்ட கேபின் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
49kWh பேட்டரி பேக் கொண்ட இ-விட்டாரா காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். காரின் விலையை அந்நிறுவனம் வெளியிடவில்லை.