என் மலர்
அரியானா
- அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்டது.
- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
அரியானாவில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குளாகி உள்ளது.
அரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இந்திய விமானப்படையின் ஜாகுவார் ஏர்கிராஃப்ட் போர் விமானம், பஞ்சகுலாவில் உள்ள மோர்னியின் பால்ட்வாலா கிராமத்திற்கு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் விபத்துக்குள்ளானது.
விமானி ஒரு பாராசூட் துணைகொண்டு தரையிறங்கி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
இருப்பினும் இந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான்.
- சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார்.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் படித்து வந்த 15 வயது சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார். பாட்டியின் கணக்கில் நிறைய பணம் இருந்துள்ளது. பாட்டியின் கணக்கை பயன்படுத்துவது பற்றி சிறுமி தனது பள்ளித் தோழர்களிடம் கூறியுள்ளார்.
அவர்களின் ஒரு மாணவன் இதை தனது மூத்த சகோதரனிடம் கூறியுள்ளான். அந்த சகோதரன் தனது நண்பர்களுடன் இணைந்து சதித்திட்டம் ஒன்றை தீட்டியுள்ளான். சிறுமியின் சமூக வலைதள கணக்கை அறிந்து அவருடன் நட்பாக அந்த இளைஞன் பழகியுள்ளான்.
சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்த மோசடி தொடங்கி சுமார் 8 மாத காலங்களாக நடந்து வந்திருக்கிறது.
இளைஞன் கேட்ட போதல்லாம் சிறுமி ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் வரை தனது பாட்டியின் கணக்கிலிருந்து தனது செல்போன் நெட் பேங்கிங் மூலம் பரிவர்த்தனை செய்துள்ளாள். இவ்வாறு சுமார் ரூ.50 லட்சம் வரை சிறுமியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் பாட்டியின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் போகவே, சிறுமி படித்து வந்த டியூசன் சென்டருக்கு சென்று அந்த இளைஞன் மிரட்டியுள்ளார். இதை கண்ட டியூசன் டீச்சர் சிறுமியிடம் விசாரித்ததில் உண்மை வெளிவந்துள்ளது.
சிறுமியின் குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பரில் விசாரணை தொடங்கியதிலிருந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய குற்றவாளி நவீன் (28) நேற்று கைது செய்யப்பட்டான். நவீனிடமிருந்து ரூ.5 லட்சத்தையும், ஒரு டெபிட் கார்டையும் போலீசார் மீட்டனர். நவீன் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
சிறுமியிடம் மோசடியாகப் பெறப்பட்ட தொகையில் இதுவரை ரூ.36 லட்சம் மீட்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- அரியானா போலீசார் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தனர்.
- மேலும் விசாரணை நடந்து வருகிறது.
காங்கிரஸ் பிரமுகர் ஹிமானி நர்வால் கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ரோதக்கில் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொலை குறித்து விசாரிக்க அரியானா போலீசார் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தனர்.
இந்த நிலையில் நர்வால் கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "ஒருவரை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
ரோதக்கில் உள்ள விஜய் நகரில் வசித்து வந்த நர்வால் அரசியலில் மிக குறுகிய காலக்கட்டத்தில் வளர்ச்சி பெற்று வந்ததை பார்த்து கட்சி தலைவர்கள் சிலர் பொறாமைப்படுவதாக நர்வாலின் தாயார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய நர்வாலின் தாயார் சவிதா, "கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நான் அவளிடம் பேசினேன். மறுநாள் ஒரு கட்சி நிகழ்ச்சியில் மும்முரமாக இருப்பேன் என்று அவள் கூறியிருந்தாள். ஆனால் அவளுடைய தொலைபேசி அணைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. என் மகளுக்கு நீதி கிடைக்காத வரை, நாங்கள் அவளை தகனம் செய்ய மாட்டோம்," என்று அவர் கூறினார்.
அரியானா காங்கிரஸ் தலைவர்கள் நர்வால் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அர்ப்பணிப்புள்ள கட்சி பிரமுகர் என்று தெரிவித்திருந்தனர். அவர் முன்னதாக ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ‘ஆன்-லைன்’ மூலம் 100 பீட்சாக்கள் ஆர்டர் செய்து அதற்கான முகவரியில் தனது காதலன் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார்.
- பெண்ணின் காதலன், நான் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை என வாக்குவாதம் செய்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், குருகிராமை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனை வினோதமான முறையில் பழிவாங்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அந்த இளம்பெண் தனது முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக திட்டமிட்டு செயல்பட்டுள்ளார்.
அதன்படி 'ஆன்-லைன்' மூலம் 100 பீட்சாக்கள் ஆர்டர் செய்து அதற்கான முகவரியில் தனது காதலன் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார். அதோடு 100 பீட்சாவுக்கான பணத்தை 'கேஷ்-ஆன் டெலிவரி' முறையில் பெற்றுக்கொள்ளுமாறும் ஆர்டர் செய்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட உணவு வினியோக ஊழியர்கள் 100 பீட்சாக்களுடன் அந்த இளம்பெண் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்றனர். அங்கிருந்த பெண்ணின் காதலன், நான் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை என வாக்குவாதம் செய்துள்ளார்.
இதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், காதலர் தினத்தன்று இப்படி ஒரு பரிசை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் எனவும், மற்றொரு பயனர், காதலித்ததால் அவருக்கு கிடைத்த பரிசு இது எனவும் பதிவிட்டனர்.
- அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள்.
- இந்தியாவைச் சேர்ந்த 104 பேரை ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவுப்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த 104 பேரை அமெரிக்கா அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அவர்கள் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இந்தியா வந்தடைந்தவர்களில் பெரும்பாலானோர் குஜராத், அரியானா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
ராணுவ விமானத்தில் வரும்போது கை மற்றும் காலில் விலங்கு மாட்டி அழைத்து வரப்பட்டனர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கண்ணியத்துடன் அமெரிக்கா நடத்தவில்லை. இது இந்தியாவுக்கு தலைக்குனிவு என விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உள்ளது. டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை என அரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரியானா அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது:-
ஒரு நபர் மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றால், பின்னர் அந்த நாடு அவரை வெளியேற்ற எல்லா உரிமையையும் பெற்றுள்ளது. டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை. இதில் இருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்கிறேன்.
லட்சக்கணக்கான மக்கள் இந்த நாட்டில் சட்டவிரோதமாக உள்ளனர். அவர்கள் வேறு எந்த நாட்டிலோ பிறந்தவர்கள். ஆனால் நாம் அவர்களுக்கு உணவு அளிக்கிறோம். அவர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும்.
இவ்வாறு அனில் விஜ் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியவர்கள் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர். இதில் தலா 33 பேர் குஜராத் மற்றும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 30 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தலா 3 பேர் மகராஷ்டிரா, உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர்கள். இரண்டு பேர் சண்டிகரை சேர்ந்தவர்கள்.
இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி, அவருடைய நண்பரான டொனால்டு டிரம்ப் உடன் இது தொடர்பாக பேச வேண்டும் என பஞ்சாப் மாநில அமை்சர் தலிவால் வலியுறுத்தியுள்ளார்.
- ஹிமான்ஷி காபா என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
- செல்போன் திருடப்பட்ட சம்பவத்தில் போலீசை அணுகியதைவிட திருடர்கள் எவ்வளவோ மேல் என்று ஆதங்கம்.
அரியானா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது சகோதரியின் செல்போன் திருடப்பட்ட சம்பவத்தில் போலீசை அணுகியதைவிட திருடர்கள் எவ்வளவோ மேல் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஹிமான்ஷி காபா என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், " நானும் எனது சகோதரியும் சந்தைக்கு சென்றிருந்தோம். அப்போது எனத சகோதரியின் செல்போன் திருடப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தோம். ஆனால், போலீசார் செல்போன் எடுத்தவனை டிராக் செய்யாமல், எங்களையே கேள்வி கேட்டனர்.
"ஒருவர் எப்படி தங்கள் போனை இழக்க முடியும்? உங்கள் போனை தொலைத்தபோது ஏற்படும் விளைவுகளைப் பற்றி நீங்கள் யோசித்திருக்க வேண்டும், இப்போது ஏன் எங்களிடம் வருகிறீர்கள்? இதில் நாங்கள் என்ன செய்ய முடியும், நீங்கள் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்?" என்று தொடர்ச்சியாக கேள்வி கேட்டனர்.
"நாங்கள் போனைக் கண்காணித்து வருவதாகவும், அது அருகில் இருப்பதாகவும் அவர்களிடம் தெரிவித்தபோது, 'அப்படியானால் நீங்களே போய் அதை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்' என்று அதிகாரி பதிலளித்தார்" என்றார்.
பின்னர், "அதிர்ஷ்டவசமாக, திருடன் மிகவும் ஒத்துழைப்பு அளித்து, எங்களைத் தொடர்பு கொண்டு, சிறிது பணத்திற்கு ஈடாக தொலைபேசியைத் திருப்பித் தருவதாகக் கூறினார்.
திருடனுக்கும் எங்களுக்கும் இடையே மிகவும் சுமூகமான ஒருங்கிணைப்பு இருந்தது, இறுதியாக, எங்கள் தொலைபேசி திரும்பப் பெறப்பட்டது," என்று காபா கூறினார்.
- யமுனை நீரில் விஷம் கலந்ததாக அரியானா அரசுமீது கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
- இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது.
சண்டிகர்:
டெல்லி மக்களின் குடிநீ்ர் ஆதாரமாக விளங்கும் யமுனை நதி நீரில் விஷம் கலந்ததாக அரியானா அரசு மீது கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், யமுனை நதியில் விஷம் கலக்க முயற்சி எனக்கூறிய கருத்து தொடர்பாக, அரியானா அரசு கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், பிப்ரவரி 17-ம் தேதி சோனிபேட் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால் சட்ட விதிகளின்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நண்பர்கள் புனித் மற்றும் குகால் ஆகிய இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்
- ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.
அரியானாவில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள நாராயண்கரில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா (41 வயது) படுகொலை செய்யப்பட்டார்.

நேற்று [வெள்ளிக்கிழமை] இரவு தனது நண்பர்கள் புனித் மற்றும் குகால் ஆகிய இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.
உடனே அவர்கள் மீட்க்கப்பட்டு சண்டிகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் ஹர்பிலாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவே உயிரிழந்தார். புனித் தற்போது நலமாகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

- செல்போன் பேசியபடியே நடந்து செல்லும் பெண் பேனரை கவனிக்காமல் செல்கிறார்.
- செல்போனுக்கு அடிமையானதன் விளைவு என பலரும் பதிவிட்டனர்.
செல்போனை அனைவருமே பயன்படுத்தி வரும் நிலையில், சிலர் போனுக்கு அடிமையாகும் சம்பவங்களையும் காண முடிகிறது. நடக்கும் போது தொடங்கி வாகனம் ஓட்டும் போதும் கூட சிலர் செல்போன் பேசியபடியே செல்வதும், இதனால் அவர்கள் விபத்துக்குள்ளான சம்பவங்களும் நடந்துள்ளது.
அது போன்ற ஒரு சம்பவம் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்துள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை கையில் வைத்து கொண்டு செல்போன் பேசியபடியே நடந்து செல்கிறார். அப்போது சாலையோரம் ஒரு பாதாள குழி உள்ளது. அதில் பொது மக்கள் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக பேனரும் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் செல்போன் பேசியபடியே நடந்து செல்லும் பெண் பேனரை கவனிக்காமல் செல்கிறார். திடீரென அவர் குழந்தையுடன் அந்த பாதாள குழிக்குள் விழுவது போன்று அதிர்ச்சியான காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த தாயை விமர்சித்தனர். செல்போனுக்கு அடிமையானதன் விளைவு என பலரும் பதிவிட்டனர்.
- கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையர்களின் கைவரிசை தெரியவந்தது.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமுடியை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டும் போது வீடுகளில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து செல்வதை கேள்விபட்டிருப்போம். சில நேரங்களில் வீடுகளில் நகை, பணம் இல்லாவிட்டால் அங்கு இருக்கும் பொருட்களையாவது திருடி செல்வார்கள்.
இந்நிலையில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஒரு வீட்டில் நடந்த வினோத கொள்ளை சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பகுதியை சேர்ந்த ரஞ்சித் மண்டல் என்பவர் விக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் தனது வீட்டில் அதிகளவில் பெண்களின் தலை முடியை மூலப்பொருளாக வாங்கி வைத்திருந்தார்.
சம்பவத்தன்று அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அங்கிருந்த 150 கிலோ எடை கொண்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள பெண்களின் தலைமுடி மற்றும் ரூ.2 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். வெளியில் சென்றிருந்த ரஞ்சித் மண்டல் வீடு திரும்பிய போது கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் பக்கத்து அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையர்களின் கைவரிசை தெரியவந்தது. இதுகுறித்து அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமுடியை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- இந்த விபத்தில் 3 பேர் சிறு காயங்களோடு உயிர் தப்பினார்கள்.
- படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியானா மாநிலத்தின் கைதல் நகரின் மார்க்கெட் அருகில் சாலையோரம் அமர்ந்திருந்த 5 பேர் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் ஒருவர் கார் ஓட்ட கற்றுக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் காரை நிறுத்துவதற்கு பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அவர் தவறுதலாக அழுத்தியுள்ளார். இதனால் வேகமாக ஓடிய கார் சாலையோரம் சேர் போட்டு உட்கார்ந்திருந்த 5 பேர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் 3 பேர் சிறு காயங்களோடு உயிர் தப்பினார்கள். படுகாயமடைந்த மீதி 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.
- ரசிகர்கள் சிம்ரன் சிங்சை ஜம்முவின் இதயத்துடிப்பு என அழைத்து வந்தனர்.
சண்டிகர்:
ஜம்மு காஷ்மீரின் ப்ரீலான்சர் ரேடியோ ஜாக்கியும், இன்ஸ்டாகிராமில் பிரபலமானவருமான சிம்ரன் சிங், அரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள அபார்ட்மென்டில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார்.
இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்துள்ளனர். இவர் கடைசியாக டிசம்பர் 13-ம் தேதி இன்ஸ்டாவில் ரீல் வெளியிட்டுள்ளா.
25 வயதான சிம்ரன் சிங் குருகுராமில் வாடகைக்கு வசித்து வந்த செக்டார் 47 அபார்ட்மென்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருடன் தங்கியிருந்த நண்பர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த போலீசார் சிம்ரன் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்கொலை தொடர்பாக எந்தக் கடிதமும் கிடைக்கவில்லை. அவருடைய குடும்பத்தினர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை.
விசாரணையில், சில நேரங்களில் சிம்ரன் சிங் அப்செட்டாக இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர்.
ரசிகர்கள் சிம்ரன் சிங்சை ஜம்முவின் இதயத்துடிப்பு என அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.