search icon
என் மலர்tooltip icon

    ஒடிசா

    • விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.
    • பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார்.

    தன்னை போலீஸ் அதிகாரி என கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய 34 வயது நபரை புவனேஸ்வரில் போலீசார் கைது செய்தனர்.

    திருமணம் செய்து ஏமாற்றியதாக 2 பெண்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பெண் போலீஸ் அதிகாரியை அவரிடம் பேச வைத்து பொறிவைத்து அவரை போலீசார் பிடித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சத்யஜித் சமாலிடம் இருந்து ரூ.2.10 லட்சம் ரொக்க பணம், கார், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, வெடிமருந்துகளை போலீசார் கைப்பற்றினர். அவரின் 3 வங்கிக்கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

    அவரது 5 மனைவிகளில் 2 பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்பது ஒருவர் கொல்கத்தா மற்றும் இன்னொருவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது பெண்ணின் விவரங்கள் காவல்துறைக்கு இன்னும் கிடைக்கவில்லை.

    இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.

    திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்த பின்னர் பணத்தை திரும்ப கேட்டால் துப்பாக்கியை காட்டி அவர் மிரட்டி உள்ளார்.

    போலீசாரின் விசாரணையில் அவர் மேட்ரிமோனியில் ஒரே நேரத்தில் 49 பெண்களுடன் திருமணம் தொடர்பாக பேசி வந்தது தெரிய வந்துள்ளது.

    அவரால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள் இதன் பிறகு புகார் கொடுக்க வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • மனதை தொடும் காதல் கதையை பகிர்ந்துள்ளார்.
    • ஓட்டலுக்கு காதல்-வாழ்க்கை என்று பெயரிட்டனர்.

    எனது பெற்றோரின் காதல் கதை என்று ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    சமீர் ரிஷூ மொஹந்தி என்ற பெயர் கொண்ட அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பெற்றோரை பற்றிய மனதை தொடும் காதல் கதையை பகிர்ந்துள்ளார்.

    அவரது தந்தை இந்தியாவை சேர்ந்தவர். தாய் ஜப்பானை சேர்ந்தவர். இவர்களுக்கு பிறந்த மொஹந்தி பதிவிட்டுள்ள வீடியோவில், எனது தாயார் ஒரு எழுத்தாளர் ஆவார். அவர் கல்லூரியில் படிக்கும் போது உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது ஒடிசா மாநிலம் பூரி பகுதிக்கு வந்த அவருக்கு அந்த பகுதி மிகவும் பிடித்துப் போனது. இதனால் படிப்பை முடித்த பிறகு பூரியில் குடியேற விரும்பிய அவர் தொடர்ந்து புத்தகங்கள் எழுதினார். ஆனாலும் போதிய வருமான ஆதாரம் இல்லை. எனவே பூரி பகுதியில் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்காக ஓட்டல் கட்ட விரும்பினார்.

    ஆனால் எனது தாய் வெளிநாட்டவர் என்பதால் அங்கு நிலம் வாங்க முடியவில்லை. அப்போது தான் எனது தந்தையை சந்தித்துள்ளார். அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அங்கு ஓட்டலை கட்டினர். அந்த ஓட்டலுக்கு காதல்-வாழ்க்கை என்று பெயரிட்டனர்.

    இந்த ஓட்டல் எனது தாய்-தந்தையின் காதல் கதைக்கு ஒரு சான்று. சில காதல் கதைகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்பது உண்மை தான் என்று முடித்தார். அவரது இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.

    • ஒடிசா கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
    • ஒடிசாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைத்த பிறகு இன்று சட்டசபை கூடியது. ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் உரையுடன் சட்டசபை தொடங்கியது. அப்போது கவர்னரின் உரைக்கு கண்டனம் தெரிவித்து பிஜு தனதா தளம் கட்சியினர் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

    இதனை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராம சந்திர கதம் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

    ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸின் மகன் லலித் தாஸ் ராஜ்பவன் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தான் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

    பின்னர் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், "அரசு அதிகாரி மீது வன்முறையில் ஈடுபட்ட கவர்னரின் மகன் மீது பாஜக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம், ஒடிசாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    ஒடிசா கவர்னரின் மகன் லலித் குமார் தன்னை அழைத்து வர சொகுசு கார் அனுப்பவில்லை என்ற ஆத்திரத்தில் கவர்னர் மாளிகை பொறுப்பு அதிகாரியை தாக்கியுள்ளார். இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாண்டியன் கட்சியை பிளவுப்படுத்த இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
    • மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமித் ஷாவிடம் பட்நாயக் உறுதி அளித்ததாக செய்தி வெளியானது.

    ஒடிசா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். பின்னர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். சமீபத்தில் நடைபெற்ற ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு பாண்டியன் முக்கிய காரணம் என பிஜு ஜனத தளம் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இதற்கிடையே கட்சியை பிரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், மாநிலங்களவையில் பாஜவு-க்கு ஆதரவு இல்லாத நிலையில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமித் ஷாவிடம் நவீன் பட்நாயக் உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் பாண்டியன் குறித்த தகவல் முற்றிலும் பொய் என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான நவீன் பட்நாயக் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில் "இது முற்றிலும் பொய், அவதூறு, விளைவை ஏற்படுத்தக்கூடியது. நான் முன்னதாக கூறியதுபோல் அதிகாரியாக பணியாற்றிய போதும், கட்சியில் பணியாற்றியபோதும் அர்ப்பணிப்புடனும், திறமையுடனும், நேர்மையுடனும் சேவையாற்றியுள்ளார். அதற்காகவே அறியப்பட்டவர். மதிக்கப்படுகிறார். பாண்டியனுடன் விசயத்தில் அவரை வைத்து விளையாட வேண்டாம் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை கேட்டுக்கொள்கிறேன்" என அதில் பதிவிட்டுள்ளார்.

    இதற்கிடையே பிஜு ஜனதா தளம் மாநிலங்களவையில் பாஜக-வுக்கு ஆதரவு கொடுக்கும் என அமித் ஷாவிடம் நவீன் பட்நாயக் உறுதி அளித்ததாக வெளியான செய்தியை பாஜக மறுத்துள்ளது.

    இது தொடர்பாக பாஜக துணைத்தலைவர் பிரஞ்சி நாராயன் திரிபாதி "பாஜக பிஜு ஜனதா தளத்திடம் இருந்து உதவி கேட்க வேண்டிய தேவையில்லை. மாநிலத்திலும், மத்தியிலும் மெஜாரிட்டி உள்ளது" என்றார்.

    • அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
    • முதற்கட்டமாக எட்டு ஊசிகள் எடுக்கப்பட்டன.

    ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா. 19 வயதான இவர் அடிக்கடி உடல்நல பாதிப்புகளால் அவதியுற்று வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இவரது தாயார் உயிரிழந்துள்ளார். அதன்பிறகு தான் இவருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட துவங்கியுள்ளது.

    இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு வாக்கில் இவர் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். அதன்பிறகு சில காலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரெஷ்மா வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு பீமா போய் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரெஷ்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

    அதில் ரெஷ்மா தலையில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரெஷ்மா தலையில் இருந்து முதற்கட்டமாக எட்டு ஊசிகள் எடுக்கப்பட்டன. எனினும், அவரது உடல்நிலையில், மாற்றம் இல்லாததால் வீர் சுரேந்திர சாய் மருத்துவமனைக்கு (விம்சார்) பரிந்துரைக்கப்பட்டார்.

    விம்சார் மருத்துவமனையில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் ரெஷ்மா தலையில் இருந்து மொத்தம் 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது நலமுடன் இருக்கும் ரெஷ்மா அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பரிசோதனைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.

    "இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைகளின் மூலம் 77 ஊசிகள் பெண்ணின் தலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக ஊசிகள் எதுவும் எலும்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தவில்லை. மாறாக தசை பகுதியில் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது," என்று விம்சார் மருத்துவமனை இயக்குநர் பாப்ராஹி ரத் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரெஷ்மா போன்று வேறு யார்யார் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறித்து காந்தபாஞ்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒடிசா விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறையால் தொடங்கப்பட்டது பிஜு பட்நாயக் விருது.
    • முன்னாள் முதல் மந்திரி பிஜு பட்நாயக் சேவையை நினைவுகூரும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறையால் தொடங்கப்பட்டது பிஜு பட்நாயக் துணிச்சலான விருது. இது ஒடிசா மக்கள் நிகழ்த்திய அற்புதமான துணிச்சலான செயல்களை அங்கீகரிக்கிறது.

    ஒடிசாவின் முன்னாள் முதல் மந்திரி மறைந்த பிஜு பட்நாயக்கின் சேவையை நினைவுகூரும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அவர் தனது வாழ்நாளில் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் பல துணிச்சலான செயல்களை வெளிப்படுத்தினார்.

    பிஜு பட்நாயக் விருது ஆண்டுதோறும் மிகச்சிறந்த துணிச்சலான செயலுக்காக வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் பிஜு பட்நாயக் விருது இனி ஒடிசா ராஜ்ய கிரிடா சம்மான் விருது என்ற பெயரில் வழங்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுக்கான பரிசுத்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுக்காக ரூ.3 லட்சம், சிறந்த வீரருக்கான விருதுக்கு ரூ. 2லட்சம் மற்றும் சிறந்த பயிற்சியாளருக்கான விருதுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    • சிறப்பு பூஜை மற்றும் சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் அரசின் உயர்மட்டக்குழுவினர் ரத்ன பண்டாரை திறந்தனர்.
    • கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டாரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    புரி:

    ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவிலின் ரகசிய அறையில் (ரத்ன பண்டார்) கோவிலுக்கு சொந்தமான விலை மதிப்பற்ற ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அறை கடைசியாக கடந்த 1978-ம் ஆண்டு திறக்கப்பட்டு இருந்தது.

    இந்த சூழலில் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜனதா அரசு ரத்ன பண்டாரை திறக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி 46 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 14-ந் தேதி ரத்ன பண்டார் திறக்கப்பட்டது.

    சிறப்பு பூஜை மற்றும் சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் அரசின் உயர்மட்டக்குழுவினர் ரத்ன பண்டாரை திறந்தனர். அன்றைய தினம், ரத்ன பண்டாரின் வெளிப்புற அறையில் இருந்த ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் மரப்பெட்டிகளில் அடைத்து தற்காலிக ரகசிய அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இந்த நிலையில் ரத்ன பண்டார் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அரசின் உயர்மட்டக்குழுவினர் காலை 9.51 மணிக்கு ரத்ன பண்டாரை திறந்தனர்.

    அதன் பின்னர் ரத்ன பண்டாரின் உட்புற அறையில் இருந்த ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் மரப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக ரகசிய அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

    ஒடிசா அரசால் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக்குழுவின் தலைவரும், ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியுமான பிஸ்வநாத் ராத் வைத்த கோரிக்கையின் பேரில் புரி மன்னர் கஜபதி மகாராஜா திவ்ய சிங் தேப், ரத்ன பண்டாரில் இருந்து தற்காலிக ரகசிய அறைக்கு ஆபரணங்கள் மாற்றப்பட்டதை நேரில் ஆய்வு செய்தார்.

    இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டாரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். மேலும் ரத்ன பண்டாரில் பாம்புகள் இருக்கலாம் என நம்பப்படுவதால் பாம்பு பிடிப்பவர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

    ரத்ன பண்டாரின் உள்அறையில் இருந்து ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை மாற்றும் போது, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பாரம்பரிய உடையுடன் ரத்ன பண்டாருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக பூரி கலெக்டர் சித்தார்த் ஷங்கர் ஸ்வைன் தெரிவித்தார்.

    • பூரி பட்டத்து அரசர் கஜபதி மகாராஜாவின் பிரதிநிதி உள்ளிட்ட 11 பேர் உடனிருந்தனர்.
    • பொக்கிஷ அறையில் உள்ள நகைகள் குறித்த பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலயத்தின் ஆபரணங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பொக்கிஷ அறை 40 ஆண்டுகளுக்குப் பின் இன்று திறக்கப்பட்டது.

    12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிற அறையில் (ரத்ன பந்தர்) பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரிய ஆபரணங்கள், மன்னர்கள் நன்கொடையாக அளித்த அரிய நகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த அறை கடைசியாக 1978-ம் ஆண்டு திறக்கப்பட்டு நகைகள் கணக்கெடுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன்பின்னர் 1985-ல் பொக்கிஷ அறையை திறந்தனர். ஆனால் அறையின் நிலை மிகவும் மோசமாக இருந்ததாலும், பாம்புகள் போன்ற ஆபத்தான பூச்சிகள் சூழ்ந்திருந்ததாலும் பெட்டிகளைதிறந்து நகைகளை கணக்கெடுக்க முடியாமல் போனது.

    இந்நிலையில், பொக்கிஷ அறையின் நகைகளை கணக்கிடுவதற்காக ஒடிசா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ராத் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பொக்கிஷ அறையை திறக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி குழுவின் உறுப்பினர்கள் இன்று மதியம் கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ஊழியர்களின் உதவியுடன் பொக்கிஷ அறையை திறந்தனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    பொக்கிஷ அறை திறக்கப்பட்டபோது முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ராத், ஜெகநாதர் கோவில் தலைமை நிர்வாகி அரபிந்த பதி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் டி.பி. கடநாயக் மற்றும் பூரி பட்டத்து அரசர் கஜபதி மகாராஜாவின் பிரதிநிதி உள்ளிட்ட 11 பேர் உடனிருந்தனர்.

    பொக்கிஷ அறையில் உள்ள இரண்டு பகுதிகளில் உள்ள பெட்டிகளில் உள்ள நகைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, பொக்கிஷ அறையில் உள்ள நகைகள் குறித்த பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஆனால் பொக்கிஷ அறையின் நிலை மோசமாக இருப்பதால், முதலில் புனரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்றும், அதன்பின்னர் பெட்டிகளை திறந்து கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்றும் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் டி.பி.கடநாயக் கூறி உள்ளார். பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பு நிறைந்த வேறு ஒரு அறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) மாற்றப்படும். அங்கு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

    • ஜூலை 7 ஆம் தேதி லலித்குமாரும் அவருடன் வந்த 5 நபர்களும் என்னை அடித்து உதைத்தனர்.
    • லலித் குமார் அவரது காலில் உள்ள சூவை நக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்

    ஒடிசா மாநிலத்தின் கவர்னராக ரகுபர் தாஸ் பொறுப்பில் உள்ளார். அவரது மகன் லலித் குமார் அப்பாவை பார்க்க ஒடிசா வந்திருக்கிறார். அப்போது அவரை அழைத்து வர பூரி ரெயில் நிலையத்திற்கு கவர்னர் மாளிகை சார்பில் கார் அனுப்ப பட்டுள்ளது.

    இந்நிலையில், தன்னை அழைத்து வர சொகுசு கார் அனுப்பப்படவில்லை என்று ஆத்திரத்தில் கவர்னர் மாளிகை வளாகத்திலேயே பைகுந்த பிரதான் என்ற அதிகாரியை லலித் குமார் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

    இது தொடர்பாக ராஜ்பவனின் பொறுப்பு அதிகாரி பைகுந்த பிரதான் கவர்னர் மாளிகையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரில், "ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி பூரி ராஜ்பவனுக்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தங்குமிடங்கள் தொடர்பான வேலைகளை கவனிக்க ஜூலை 5 ஆம் தேதி முதல் ராஜ் பவனில் நான் வேலை செய்து வந்தேன்.

    இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி லலித்குமாரும் அவருடன் வந்த 5 நபர்களும் என்னிடம் தகாத முறையில் பேசியதோடு என்னை அடித்து உதைத்தனர். மேலும் லலித் குமார் அவரது காலில் உள்ள சூவை நக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.
    • 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை சென்றடைந்ததும் ஜெகநாதர் ஓய்வெடுப்பார்.

    ஜெகநாத ரதயாத்திரை ஒடிசா நகரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான இந்து பண்டிகையாகும். இதில் ஜெகநாத ரதயாத்திரையில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது மற்றும் மிகவும் பிரபலமானது.

    மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாலையில் பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலநாத சரஸ்வதி தனது சீடர்களுடன் ஜெகநாதர், பாலபத்திரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் தேர்களை தரிசனம் செய்தனர்.

    இந்த சடங்கு முடிந்ததும், மாலை 5.20 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஜெகநாதர் தேரின் வடம் பிடித்து இழுத்து ரத யாத்திரையை முறைப்படி தொடங்கி வைத்தனர்.

    அதன்பின் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர். முதலில் பாலபத்திரர் தேர் இழுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுபத்ரா தேர், அதன்பின் ஜெகநாதர் தேர் இழுக்கப்பட்டது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    9 நாட்கள் இந்த திருவிழா நடக்கும். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ.

    தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோவிலான மவுசிமா கோவிலுக்கு சென்று ஓய்வு எடுப்பார்கள். பின்னர் அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை சென்றடைந்ததும் ஜெகநாதர் ஓய்வெடுப்பார்.

    திருவிழாவின் 4 நாளில் தனது கணவர் ஜெகநாதரை காண லட்சுமி தேவி, குண்டிச்சா கோவிலுக்கு வருகை தருவார். அதை தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் விழா நிறைவுபெறும்.

    • மூச்சு விட முடியாமல் பாம்பு தவித்து கொண்டிருந்தது.
    • வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நாகப்பாம்பு ஒன்று, தூக்கி எறியப்பட்ட இருமல் மருந்து பாட்டிலை விழுங்கி உள்ளது. அந்த பாட்டில் பாம்பின் தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் பாம்பு தவித்து கொண்டிருந்தது.

    இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த தன்னார்வலர்கள் கொக்கி முனையால் நாகப்பாம்பின் கீழ் தாடையை மெதுவாக விரித்து அந்த பாட்டிலை எடுத்தனர். பின்னர் அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    இதுகுறித்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    • இந்த முறை பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் பிரச்சனையை மட்டுமே பேசப்போவதில்லை.
    • பாஜக தலைமையிலான அரசு ஒடிசா மாநில நலத்தை புறக்கணித்தால், போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

    மக்களவை தேர்தலில் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. சட்டசபை தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது. அந்த கட்சிக்கு 9 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனர்.

    இந்திய நாடாளுமன்றம் மக்களவை இன்று கூடியது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்று வருகின்றனர். ஜூன் 27-ந்தேதி மாநிலங்களவை கூட இருக்கிறது. இந்த நிலையில் நவீன் பட்நாயக் தனது கட்சி மாநிலங்களவை எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மாநில நலன் குறித்து மாநிலங்களவையில் கடுமையான வகையில் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அக்கட்சிக்கான மாநிலங்களவை எம்.பி. தலைவர் சஸ்மித் பத்ரா கூறியதாவது:-

    இந்த முறை பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் பிரச்சனையை மட்டுமே பேசப்போவதில்லை. பாஜக தலைமையிலான அரசு ஒடிசா மாநில நலத்தை புறக்கணித்தால், போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

    கடந்த 10 ஆண்டுகளாக நிலக்கடி சுரங்க ராயல்டி ஒடிசாவுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அந்த ராயல்டி கிடைக்கும் வகையில் கோரிக்கை வைப்போம். இதன் காரணமாக எங்கள் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமையான பங்கு குறைக்கப்பட்டு மக்கள் இழப்பை சந்தித்து உள்ளனர்.

    பாஜகவுக்கு ஆதரவு கிடையாது. நாங்கள் எதிர்க்கட்சிகள் மட்டுமே ஒடிசா மாநிலத்திற்கான நலனை காப்பாற்றுவதற்கான எந்த எல்லை வரையும் செல்வோம். பாஜகவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. ஒடிசாவின் நலம் புறக்கணிக்கப்பட்டால் கடுமையான வகையில் எதிர்க்க வேண்டும் என நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பாஜகவும் பிஜு ஜனதா தளமும் தனித்தனியாக போட்டியிட்டு வந்தாலும் பாஜகவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தது. தற்போது பாஜக கடுமையாக விமர்சனம் செய்து ஒடிசாவில் ஆட்சியை பிடித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளது.

    ×