என் மலர்
செங்கல்பட்டு
- சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- துணை முதல்வர் என்றால் பெரும்பான்மையாக உள்ள 80% மக்களை கொல்லாலாமா? என எச். ராஜா ஆவேசம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற மாநாடு நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய உதயநிதி, ""இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்" என்று தெரிவித்தார்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியதற்கு நாடு முழுவதும் உள்ள பாஜக, இந்துத்துவ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உதயநிதி மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், சனாதன விவகாரத்தில் விரைவிலேயே உதயநிதி கைது செய்யப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச். ராஜா, "கூடிய விரைவில் எல்லா மாநிலங்களிலும் உதயநிதிக்கு எதிரா பிடிவாரண்ட் வந்து விடும். சீக்கிரமாகவே ஜெயிலுக்கு போகி விடுவார்.
சனாதன இந்து தர்மத்தை நீ டெங்கு கொசு மலேரியா கொசு மாதிரி கொன்னுடுவியா? அவ்ளோ திமிரு உங்களுக்கு இருக்கா?
துணை முதல்வர் என்றால் பெரும்பான்மையாக உள்ள 80% மக்களை கொல்லலாமா? அவர்களை டெங்கு, மலேரியா கொசு மாதிரி அழிப்பேன்னு பேசுவாரா?
அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் யார் இந்த சார் ஏன்னு சொல்ல உதயநிதிக்கு துப்பு இல்லை. ஆனா இந்து மதத்தை கொசு மாதிரி கொல்லலாம் என்று அவர் பேசலாமா?
இந்த தேச விரோத தீய சக்திகள் 2026 இல் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
- சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தானே திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார்.
- ஜோதி வடிவில் இறைவனை வள்ளலாளர் வணங்க சொன்னதும் சனாதனம் தான்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வள்ளுவன் சிலையை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், "வள்ளுவர், வள்ளலார் என சமூக நீதி பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே சுற்றிக்கொண்டிருக்கிறது. வான்புகழ் வள்ளுவருக்கு குமரியில் சிலை திறந்த 25-ம் ஆண்டில் இங்கும் சிலை திறப்பதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செங்கல்பட்டில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வள்ளுவர் மற்றும் வள்ளலாரை களவாட பார்க்கிறார்கள் என்ற முதல்வரின் கருத்து தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த எச். ராஜா. "சனாதன இந்து தர்மத்தில் தர்மம் என்றால் அறம், அர்த்தம் என்றால் பொருள், காமம் என்றால் இன்பம். இந்த மூன்றில் உங்கள் வாழ்க்கை அமையுமானால் மோட்சம் கிடைக்கும்.
சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தானே திருவள்ளுவர் திருக்குறளை எழுதியுள்ளார். ஜோதி வடிவில் இறைவனை வள்ளலாளர் வணங்க சொன்னதும் சனாதனம் தான்.
திருக்குறளை மலம் என்று கூறியவரை நீங்கள் அப்பா என்று சொல்கிறீர்கள். தந்தை என்றால் அப்பாதானே. சிலப்பதிகாரத்தை விபச்சாரியின் கதைன்னு ஈவெரா சொல்லவில்லையா? இந்து மதத்தின் தமிழ் மொழியில் மிகப்பெரிய விரோதிகள் இந்த திராவிட இயக்கத்தவர்கள்.
என் தாய் மொழி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈவெராவை தந்தை என்று சொல்கிறவர்கள் எல்லாம் தமிழ் மொழியின் விரோதிகள்.
திருவள்ளுவருக்கு இது தான் உடை என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கும் தெரியாது. நீங்க வெள்ளை உடை அணியலாம் நான் காவி போடக்கூடாதா? என் இஷ்டம்" என்று தெரிவித்தார்.
- கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 500 மீ. தொலைவில் 3 நடைமேடைகளுடன் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம்:
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து கிளாம்பாக்கத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரெயில் நிலையம் அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதற்கான பணிகளும் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இதனால் ரெயில் நிலையம் எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில் நிலையம், மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 500 மீ. தொலைவில் 3 நடைமேடைகளுடன் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
- அடையாளம் தெரியாத கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் சென்று விட்டு, வடக்குப்பட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
திருக்கழுக்குன்றம் போலீசார் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
- 200க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.
மாமல்லபுரம்:
சென்னை சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இது வன ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அழுகிய நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகளால், சுற்றுச்சூழல் சீர்கேடும் அடைந்து வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றும், இன்றும் மாமல்லபுரம் சுற்றுவட்டார கடலோர மீனவர் கிராமங்களான நெம்மேலி, தேவநேரி, பட்டிபுலம், வெண்புருஷம், கொக்கிலமேடு உள்ளிட்ட கடலோரத்தில் 20க்கும் மேற்பட்ட ஆமைகள் ஆங்காங்கே செத்து கரை ஒதுங்கி கிடக்கிறது. இதை அப்பகுதி மீனவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கிழக்கு கடற்கரை சாலை கடலோர பகுதியில், அதிகளவில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளோம். கடற்கரை பகுதிகளுக்கு முட்டையிட வரும் ஆமைகளுக்கு இயற்கை சூழலில் நெருக்கடி ஏற்படுவதால், அது தன் போக்கை மாற்றி மாற்று இடங்களுக்கு செல்லும் போது, கனவா வலைகள் (டிரால் நெட்) வலைகளில் அடிபட்டு மூச்சுவிட முடியாமல் இறந்தும் கரை ஒதுங்குவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வரும் 22-ந் தேதி மீன்வளத்துறை சார்பில், இது தொடர்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
இறந்து கரை ஒதுங்கிய ஆமைகளை, வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் கடற்கரை பகுதிகளில் புதைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வடநெம்மேலியில் உள்ள பாம்பு பண்ணையை சுற்றுலா பயணிகள் பார்க்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
- பொங்கல் தொடர் விடுமுறையில் இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த, வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலை பண்ணை வளாகத்தில், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த சங்கத்தில் செங்கல்பட்டு, சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட இருளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் உள்ளிட்ட கொடிய விஷமுடைய பாம்புகளை பிடித்து சங்கத்தில் ஒப்படைப்பது வழக்கம்.
இந்த பாம்புகளை மண்பானையில் அடைத்து வைத்து, பாதுகாத்து அதில் இருந்து விஷம் எடுக்கப்படுகிறது. வடநெம்மேலியில் உள்ள பாம்பு பண்ணையை சுற்றுலா பயணிகள் பார்க்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். பொங்கல் தொடர் விடுமுறையில் இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இந்த ஆண்டு 13 ஆயிரம் பாம்புகள் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த 6 மாதங்களில் 1130 கட்டுவிரியன், 5043 சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் 149, நல்ல பாம்பு 120 என மொத்தம் 6 ஆயிரத்து 442 பாம்புகள் பிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த பாம்புகளிடம் விஷம் எடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது குளிர் காலம் என்பதால் குளிரை தாக்கு பிடிக்க பாம்புகள் உள்ள பானைகளை சுற்றி வைக்கோல் வைத்து பாம்புகளுக்கு சூடு ஏற்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- வேன் மோதி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வண்டலூர்:
சிங்கபெருமாள் கோவில் அடுத்த அஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது78). நேற்று மாலை அவர் திருத்தேரி பகத்சிங் நகர் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு நடந்து வந்தார்.
மகேந்திரா சிட்டி ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றபோது விழுப்புரம் மாவட்டம், கோணாதி குப்பம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி வந்த வேன் திடீரென கோவிந்தசாமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குறித்து வழக்கு பதிவு செய்து வேனை ஓட்டி வந்த வியாசர்பாடியை சேர்ந்த டிரைவர் காளிதாசகை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த நண்பருடன் நெருக்கமாக உள்ள ஒருவரை சரவணன் தாக்கியதாக தெரிகிறது.
- கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வண்டலூர்:
உத்திரமேரூர் அடுத்த களியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சரவணன் (வயது 20). நேற்று இரவு சரவணன் நண்பர்களுடன் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் மதுகுடித்தார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் சரவணனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சரணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே உடன் இருந்த நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்ததும் மறைமலை நகர் போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரித்த போது பரபரப்பு தகவல் கிடைத்தது. சரவணன் மற்றொரு நண்பருக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த நண்பருடன் நெருக்கமாக உள்ள ஒருவரை சரவணன் தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக மதுகுடித்த போது சரவணனை உடன் இருந்த நண்பர்கள் கேட்டு உள்ளனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் சரவணன் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- விலங்குகளை பார்வையிட வார விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வருவது உண்டு.
- வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர்:
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை, மனிதகுரங்கு, காண்டாமிருகம், பாலூட்டிகள், ஊர்வன போன்ற விலங்குகள் பாதுகாக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இங்கு விலங்குகளை பார்வையிட வார விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வருவது உண்டு. மேலும் முக்கிய விழா காலங்கள் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை யொட்டி ஏராளமான பார்வையாளர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அவர்களின் வசதிக்காகவும், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு சீட்டு பெறுவதற்காக 6 கவுண்டர்கள் உள்ளன. இதில் பணம் கொடுத்து டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பண பரிவர்த்தனை மட்டுமல்லாமல் யுபிஐ மூலமும் நுழைவு டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் கவுண்டர்களில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மூங்கில் கம்புகள் கட்டி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு வரக்கூடிய பயணிகள், தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கூடுதலாக பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவையும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உயிரியல் பூங்காவின் உள்ளே செல்ல தனி நுழைவாயில், வெளியே வருவதற்கு தனி வழி என 2 வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பூங்காவை சுற்றி சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 75-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் பாதுகாப்பிற்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை வண்டலூர் உயிரியல் பூங்கா உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு தெரிவித்தார்.
- ஹெலிகாப்டர் சவாரி கோவளத்தில் ஆரம்பித்து முட்டுக்காடு, நெம்மேலி, வடநெம்மேலி, பட்டிகுளம் வரை சென்று விட்டு மீண்டும் கோவளத்தை வந்தடையும்.
- ஹெலிகாபாப்டர் சவாரி செய்தவர்களுக்கு ஆதார் அட்டைகள் நகல் பெறப்பட்டு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கோவளம்:
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி திருநாளில் ஹெலிகாப்டர் சவாரி சுற்றுலா தொடங்கப்பட்டது. இதில் நபர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி 1,000 அடி உயரத்தில் பறந்து 5 நிமிடத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் கண்டுகளிக்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற்று வந்தது.
பின்னர் திடீரென ஹெலிகாப்டர் சுற்றுலா சவாரி நிறத்தப்பட்டது.
மீண்டும் நேற்று ஹெலிகாப்டர் சுற்றுலா சவாரி தொடங்கியது. நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்களும், மீண்டும் ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் 6 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சவாரி நடக்கிறது. நேற்று ஆன்லைனில் ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்தவர்கள் பலர் ஆா்வமாக கிழக்கு கடற்கரை சாலையில் ஹெலிகாப்டரில் வானில் பறந்து அழகிய கடற்கரை, பக்கிங்காம் கால்வாய், பழைய மாமல்லபுரம் சாலையின் அழகிய வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் வானில் வட்டமடித்தபடியே ஆர்வமாக பார்த்து ரசித்தனர். ஹெலிகாப்டர் சவாரி கோவளத்தில் ஆரம்பித்து முட்டுக்காடு, நெம்மேலி, வடநெம்மேலி, பட்டிகுளம் வரை சென்று விட்டு மீண்டும் கோவளத்தை வந்தடையும்.
முன்னதாக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தவர்கள் ஹெலிகாப்டர் சவாரி கோவளம் ஹெலிபேடில் வந்து காத்திருந்தனர். ஆனால் தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து சரியான சிக்னல் கிடைக்காததால் பல மணி நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் உல்லாசமாக ஹெலிகாப்டர் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
முன்னதாக ஹெலிகாபாப்டர் சவாரி செய்தவர்களுக்கு ஆதார் அட்டைகள் நகல் பெறப்பட்டு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
- சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.
- ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.
சென்னை:
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 10-வது ஆண்டாக தமிழகத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.
இதன்படி சென்னையை அடுத்த கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் 10-ந்தேதி (இன்று) முதல் 12-ந்தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.

இந்த நிலையில், சென்னை பலூன் திருவிழாவை சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மதியம் 3 மணி முதல், பலூன் திருவிழாவை காண பொதுமக்கள் டிக்கெட் வாங்கி ஆர்வத்துடன் குவிய தொடங்கினர்.
ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், பலூன்களை பறக்க விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேரம் முயற்சி செய்த பிறகும், பலூன்களை பறக்கவிடும் முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் அங்கு காத்திருந்த பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
- கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.
- இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கும் இவ்விழாவை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
10-வது ஆண்டாக தமிழகத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.
கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ஜனவரி10-ந்தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14 முதல் 16-ந் தேதி வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் நாடுகளில் இருந்து வந்த பலூன் பைலட்கள் மூலமாக டைகர், பேபி மான்ஸ்டர்,சீட்டா, மிக்கி மவுஸ், எலிபண்ட், உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டது.

விழாவை அமைச்சர்கள் அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் துவங்கி வைத்தனர்., பின்னர் பலூனில் ஏறி சில மீட்டர் துரம் பறந்தனர். சுற்றுலாத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், இயக்குனர் ஷில்பா பிரபாகர், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமும் மாலை 4மணி முதல் இரவு 9மணி வரை பலூன்கள் வானில் பறக்கிறது. அத்துடன் இசை கச்சேரி, உணவு திருவிழா, கண்காட்சிகளும் நடக்கிறது., நுழைவு கட்டணமாக ஆன்-லைன் மற்றும் நேரடியாக பெரியவர்களுக்கு ரூ.200ம், சிறுவர்களுக்கு இலவச அனுமதியும் என கட்டணம் நிர்ணயிக்கபட்டுள்ளது.