search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: வாக்காளர்களுக்கு பிரதமர் மோடியின் வேண்டுகோள்
    X
    LIVE

    ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: வாக்காளர்களுக்கு பிரதமர் மோடியின் வேண்டுகோள்

    • பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு
    • 25.78 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள்.

    ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக கடந்த வாரம் 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 6 மாவட்டங்களை சேர்ந்த 25.78 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள்.

    Live Updates

    • 25 Sept 2024 3:12 AM GMT

      கந்தர்பால் கங்கன் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி

    • 25 Sept 2024 3:09 AM GMT

      புலம்பெயர்ந்த வாக்காளர் பூலா பட் "நான் என்னுடைய வாக்கை செலுத்தியுள்ளேன். எல்லோரும் வாக்குச்சாவடி வந்து வாக்கை செலுத்த வேண்டும். வாக்குமையத்தில் வசதிகள் சிறப்பாக உள்ளது" என்றார்.

    • 25 Sept 2024 2:16 AM GMT

      ஜம்மு-காஷ்மீர் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிக்கப் போகும் அனைத்து வாக்காளர்களும் பயங்கரவாதம் இல்லாத மற்றும் வளர்ந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்க அதிகபட்ச அளவில் திரண்டு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • 25 Sept 2024 2:07 AM GMT

      ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவரும் மற்றும் நவ்ஷேரா தொகுதி வேட்பாளருமான ரவீந்தர் ரெய்னா காலையிலேயே தனது வாக்கை பதிவு செய்தார்.

    • 25 Sept 2024 1:59 AM GMT

      ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • 25 Sept 2024 1:09 AM GMT

      ஜம்முவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு எந்திரம் சரியாக வேலை செய்கிறரா? என அதிகாரிகள் பரிசோதிக்கும் காட்சி

    • 25 Sept 2024 1:07 AM GMT

      ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • 25 Sept 2024 1:05 AM GMT

      பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்று வாக்குப்பதிவு மையத்தில் அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கு தயாராகும் காட்சி.

    Next Story
    ×