search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.
    • அரினா சபலெங்கா, அமெரிக்காவின் எம்மா நவரோவை எதிர் கொண்டார்.

    பாரீஸ்:

    'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ரைபகினா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    அதேபோல மற்றொரு ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா, அமெரிக்காவின் எம்மா நவரோவை எதிர் கொண்டார். இதில் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி சபலெங்கா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • டிமிட்ரோவ் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
    • அல்காரஸ், சிட்சிபாஸ் ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் சினெர்-பிரான்சின் மவுடெட் மோதினர். இதில் சினெர் 2-6, 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் டிமிட்ரோவ் (பல்கேரியா-7-6 (7-5), 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

    அதே போல அல்காரஸ் (ஸ்பெயின்), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு ஸ்வியாடெக் (போலந்து)-வோன்ட்கோவா (செக்குடியரசு), கோகோ காப் (அமெரிக்கா)-ஜபீர் (துனிசியா) ஆகியோர் தகுதி பெற்றனர்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வென்றது.

    பாரீஸ்:

    கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- பிரேசிலின் மார்செலோ-ஓர்லாண்டோ ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. 3 சுற்றுகள் முடிந்து 4-வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டியில் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ்,

    கனடா வீரர் பெலிக்ஸ் ஆகருடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டுடன் மோதினார். இதில் முதல் செட்டை சிட்சிபாஸ் 3-6 என இழந்தார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட சிட்சிபாஸ் 7-6 (7-4), 6-2, 6-2 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. மூன்று சுற்றுகள் முடிந்து 4-வது சுற்றுப் போட்டிகள் இன்று நடந்தன.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை அனஸ்டாசியாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-0, 6-0 என எளிதில் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொண்டார். இதில் கோகோ காப் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • கின்வென் ஜெங் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரும், 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற சாதனையாளருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் 7-5 ,6-7 (6-8), 2-6 6-3, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியை சேர்ந்த 30-ம் நிலை வீரரான லாரன்சோ முசெட்டியை வீழ்த்தி 4-வது ரவுண்டுக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் ( ஜெர்மனி), 5-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் இருக்கும் ஷபலென்கா (பெலாரஸ்), நான்காம் நிலை வீராங்கனை எலினா ரைபகினா ( கஜகஸ்தான்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    7-வது வரிசையில் உள்ள சீனாவை சேர்ந்த கின்வென் ஜெங் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். ரஷியாவை சேர்ந்த எலினா அவனேசியன் 3-6, 6-3, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷியாவின் மெத்வதேவ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இரு சுற்றுகள் முடிந்து 3-வது சுற்றுப் போட்டிகள் இன்று நடந்தன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செக் வீரர் தாமஸ் மசாக்குடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் முதல் இரு செட்டை 7-6 (7-4), 7-5 என கைப்பற்றினார். தாமஸ் மசாக் 3வது செட்டை 6-1 என கைப்பற்றினார்.

    நான்காவது செட்டை மெத்வதேவ் 6-4 என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் அல்காரஸ் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இரு சுற்றுகள் முடிந்து 3வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-4, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், சீனாவின் ஜாங் ஜீஜெனுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 6-3, 6-1 என கைப்பற்றி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • போட்டியின் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ளும் முனைப்பில் டொமிக் களமிறங்கினார்.
    • ஜப்பான் வீரர் யுடா ஷிமிசு முதல் செட்-ஐ 6-க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.

    அமெரிக்காவின் அர்கன்சாசில் ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பெர்னார்ட் டொமிக் மற்றும் ஜப்பானை சேர்ந்த யுடா ஷிமிசு மோதினர். சர்வதேச தரவரிசையில் இவர்கள் முறையே 247 மற்றும் 265 இடங்களில் உள்ளனர்.

    இத்தகைய போட்டிகளில் விளையாடி தனது தரவரிசையை முன்னேற்றி, போட்டியின் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ளும் முனைப்பில் டொமிக் களமிறங்கினார். எனினும், துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜப்பான் வீரர் யுடா ஷிமிசு முதல் செட்-ஐ 6-க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.

    போட்டியின் போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பலமுறை கூறிய டொமிக், மருத்துவர்கள் உதவியை நாடினார். எனினும், களத்தில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்று கூறி போட்டி நடுவர் அவரை விளையாடுமாறு கூறியுள்ளார்.

    இதனிடையே இந்த போட்டியை காண டொமிக்-இன் காதலி கீலி ஹண்ணா வந்திருந்தார். போட்டியின் போது டொமிக் மற்றும் அவரது காதலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விளையாடிய அவர் போட்டியில் கவனம் செலுத்த முடியாதவராக காணப்பட்டார்.

    இரண்டாவது செட்-இல் 5 புள்ளிகளை மட்டும் பெற்ற டொமிக் அதன்பிறகு போட்டியில் இருந்து வெளியேறினார். உடல்நிலை மோசமாவதால், தொடர்ந்து விளையாட முடியாது என்று கூறி டொமிக் போட்டியில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து டொமிக்-இன் காதலியும் களத்தில் இருந்து வெளியேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷியா வீரர் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இரு சுற்றுகள் முடிந்து 3-வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் ரஷிய வீரரான ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டுடன் மோதினார்.

    இதில் அர்னால்டு 7-6 (8-6), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரூப்லெவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 4-வது சுற்றில் அர்னால்டு, சிட்சிபாசை சந்திக்கிறார்.

    • செர்பியா வீராங்கனையான ஓல்கா டானிலோவிச் குரோஷிய வீராங்கனையான டோனா வெகிக்கை எதிர் கொண்டார்.
    • 4-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொள்ள உள்ளார்.

    பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க முன்னணி வீராங்கனையான கோகோ காப் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கோகோ காப் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவை எதிர்கொள்ள உள்ளார்.

    இதேபோல செர்பியா வீராங்கனையான ஓல்கா டானிலோவிச் குரோஷிய வீராங்கனையான டோனா வெகிக்கை எதிர் கொண்டார். இதில் முதல் செட்டை ஒரு புள்ளி கூட எடுக்காமல் இழந்த அவர் அடுத்த 2 செட்டுகளை வென்றார். இதன் மூலம் 0-6, 7-5, 7-6 (8) என்ற செட் கணக்கில் ஓல்கா டானிலோவிச் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. முதல் சுற்று முடிந்து 2வது சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ராபர்டோவுடன் மோதினார். இதில் 6-4, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செர்பியாவின் மியோமிருடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டில் 5-0 என முன்னிலை பெற்ற நிலையில், மியோமிர் காயத்தால் விலகினார்

    இதனால் மெத்வதேவ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×