search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

    • நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
    • 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

    தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.

    Live Updates

    • 15 March 2025 10:52 AM IST

      வேளாண் பொருட்களை பதப்படுத்த, மதிப்பு கூட்டுதலுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு. 

    • 15 March 2025 10:51 AM IST

      300 கிராமபுற இளைஞர்களுக்கு இயந்திரங்களை கையாள பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு

    • 15 March 2025 10:51 AM IST

      திறந்தவெளி பாசன கிணறுகளுக்கு சுற்றுசுவர் கட்ட மானியம் அளிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு

    • 15 March 2025 10:50 AM IST

      காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு, வடிநிலப்பகுதிகளிலும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளிலும் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    • 15 March 2025 10:49 AM IST

      வேளாண் பணிகளில் இயந்திரமயமாக்கலை கொண்டு வர உழவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படும். இதற்காக ரூ.3.55 கோடி ஒதுக்கீடு.

    • 15 March 2025 10:48 AM IST

      நீர் பற்றாக்குறையை போக்க ரூ.2.75 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    • 15 March 2025 10:48 AM IST

      மின் மோட்டார் பம்பு செட்டுகள் ரூ.15000 வரை மானியமாக வழங்கப்படும். 

    • 15 March 2025 10:47 AM IST

      சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    • 15 March 2025 10:46 AM IST

      சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்தில் வழங்கப்படும். 

    • 15 March 2025 10:45 AM IST

      சி, டி பிரிவு வாய்கால்களை தூர்வார ரூ.13.80 கோடி நிதி ஒதுக்கீடு.

    Next Story
    ×