search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

    • நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
    • 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

    தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.

    Live Updates

    • 15 March 2025 10:39 AM IST

      எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக ரூ.108 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். 

    • 15 March 2025 10:39 AM IST

      வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மூலம் குறைந்த வாடகையில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

    • 15 March 2025 10:37 AM IST

      உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு.

    • 15 March 2025 10:37 AM IST

      சிறுகுறு உழவர்கள் வேளாண் கருவிகள் வாங்க 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    • 15 March 2025 10:36 AM IST

      சிறுகுறு உழவர்கள் பயனடையும் வகையில் மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படும்.

    • 15 March 2025 10:36 AM IST

      சிறிய வகை வேளாண் கருவிகளுக்கான மானியம் ரூ.1.75 லட்சமாக உயர்வு

    • 15 March 2025 10:35 AM IST

      17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.215.80 கோடி நிதி ஒதுக்கீடு.

    • 15 March 2025 10:34 AM IST

      வெண்ணை பழ உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.69 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    • 15 March 2025 10:33 AM IST

      புதிய பலா சாகுபடி உள்ளிட்ட திட்ட கூறுகளை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு

    • 15 March 2025 10:33 AM IST

      பலா மேம்பாட்டு இயக்கத்திற்காக ரூ.3.75 லட்சம் நிதி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

    Next Story
    ×