என் மலர்
தமிழ்நாடு
வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

- நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.
தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
Live Updates
- 15 March 2025 10:26 AM IST
காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
- 15 March 2025 10:24 AM IST
ஊட்டச்சத்து வேளாண் இயக்கத்திற்கு ரூ.297 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:23 AM IST
புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க 5 காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
- 15 March 2025 10:22 AM IST
பயிர்க்கடன் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:22 AM IST
கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.10.63 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:21 AM IST
5000 ஏக்கரில் தென்னை மறுநடவு மற்றும் புத்தாக்கம் செய்ய நடவடிக்கை- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:19 AM IST
ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் செயல்படுத்தப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 10:18 AM IST
75 சதவீத மானிய விலையில் காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.