என் மலர்tooltip icon

    உக்ரைன்

    • உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
    • போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என்றார் அதிபர் டிரம்ப்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. இரு நாடுகள் இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு போர்நிறுத்தம் குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. ஆனாலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என டிரம்ப் தெரிவித்தது சர்ச்சையானது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தலைநகர் கீவில் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    உக்ரைனில் அமைதி திரும்ப நான் எனது பதவியை விட்டுத் தரவேண்டும் என்றால் அதற்கு தயாராகவே இருக்கிறேன். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளேன்.

    உக்ரைனின் நிலைப்பாட்டை டிரம்ப் புரிந்துகொள்ள வேண்டும். ரஷியாவின் தாக்குதலால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, டிரம்ப் ரஷியாவிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

    இந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்ப உக்ரைனின் கூட்டாளியாக டிரம்ப் இருக்க வேண்டும். இதை டிரம்ப் புரிந்து கொள்வோர் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • போர் நிறுத்தம் குறித்து நாங்கள் இல்லாமல் ஆலோசிப்பதா?
    • பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.

    கீவ்:

    நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இதற்கிடையே சவுதி அரேபியாவில் நேற்று அமெரிக்கா, ரஷ்யா உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோ, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.

    இதில் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நல்லுறவை மேம்படுத்துவதற்கும் பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் துருக்கிக்கு சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா-ரஷியா இடையேயான பேச்சுவார்த்தை குறித்து கூறியதாவது:-

    சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காததால் அதில் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு பேச்சு வார்த்தையும் நியாயமானதாக இருக்க வேண்டும்.

    பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்த துருக்கி உட்பட ஐரோப்பிய நாடுகள் இடம்பெற வேண்டும். எங்கள் முதுகுக்குப் பின்னால் யாரும் எதையும் முடிவு செய்யக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.

    உக்ரைனில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து உக்ரைன் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. சவுதி அரேபியாவுக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால் அந்த பயணத்தை மார்ச் 10-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் ரஷிய அதிபர் புதினை இந்த மாதத்தில் சந்திப்பேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • தற்போது ரஷியா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
    • ரஷ்யா ஏவிய 95 டிரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது

    கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து கடந்த 3 வருடங்களாக ரஷியா - உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. போர் தொடங்கியபோது ரஷியா, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக வலுவாக சண்டையிட ரஷிய பல இடங்களில் பின்வாங்க தொடங்கியது.

    தற்போது இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

    கடந்த மாதம் ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள், ராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    இந்நிலையில், தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு அனல் மின் நிலையத்தின் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதலில் ரஷ்யா 143 டிரோன்களை ஏவியதாகவும் அதில், 95 டிரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது என்றும் 46 டிரோன்கள் இலக்கை அடையவில்லை என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

    • செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்.
    • கதிரியக்கம் வெளியாகாமல் இருக்க பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கூரை தீப்பற்றி எரிந்தது.

    ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதில் இருந்து சுமார் மூன்று வருடங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. போர் தொடங்கியபோது ரஷியா, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக வலுவாக சண்டையிட ரஷிய பல இடங்களில் பின்வாங்க தொடங்கியது.

    தற்போது இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

    கடந்த மாதம் ரஷியாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள், ராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள 4-வது உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறாமல் இருக்க கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூரை டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகி, தீப்பற்றி எரிந்துள்ளது. நல்லவேளையாக, அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறவில்லை. வழக்கமான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    1986-ம் ஆண்டு இந்த அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. உலகில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த விபத்து காரணமாக கதிர்வீச்சு வெளியேறாத வகையில் 4-வது அணு உலைக்கு மேல் பாதுகாப்பிற்கு கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அணுஉலையில் எஞ்சியிருக்கும் கதிரியக்கம் வெளியேறாத வகையில் இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான 3 வருட சண்டையில் உக்ரைனில் உள்ள நான்கு அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்க விடுக்கப்பட்ட்டள்ளது. இதில் தெற்கு உக்ரைனில் ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஸ்சியா அணுமின் நிலையம் ஐரோப்பியாவில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையமாகும். மேலும், உலகில் உள்ள மிகப்பெரிய 10 அணுஉலைகளில் ஒன்றாகும்.

    • உக்ரைனின் பெரிய நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட 6 பேர் பலியாகினர்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது.

    அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் போரை எதிர்கொண்டு வருகிறது.

    உக்ரைனின் பெரிய நகரங்களில் ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ரஷிய ராணுவம் உக்ரைனின் பொல்டாவா நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதை தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிதத்திலிருந்து சுமார் 22 பேர் மீட்கப்பட்டனர்.

    அதேபோல், உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன் இடிபாடுகளில் விழுந்ததில் 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் இன்று மட்டும் 6 பேர் கொல்லப்பட்டனர்.

    உக்ரைன் ராணுவமும் பதிலுக்கு ரஷியா மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் 9 டிரோன்களை இடைமறித்து தாக்கி அழித்தனர்.

    • மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் போரை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருகிறது.
    • குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    கீவ்:

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அதே சமயம், மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் போரை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் உக்ரைனின் பெரிய நகரமாக சுமியில் ரஷியா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பானது சேதம் அடைந்தது. இருப்பினும் இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் அந்த குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    அதேபோல் உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில், ரஷிய டிரோன்கள் ஒரு மருத்துவமனை மற்றும் இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களை சேதப்படுத்தியதாக பிராந்தியத் தலைவர் ஓலே கிப்பர் டெலிகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

    மேலும் இரவு நேரங்களில் ரஷியா ஏவிய 80-க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

    ரஷ்யா உக்ரைனில் இரவு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியதாக விமானப்படை தெரிவித்துள்ளது, இவை பொதுவான இரவு நேரத் தாக்குதல்கள். பெரும்பாலான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    • பதவியேற்றபின் முதல் முறையாக ஸ்டார்மர் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு வருகை தந்துள்ளார்.
    • உக்ரைன் நேட்டோ நாடாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    உக்ரைனுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இரு நாடுகளுக்கும் 100 ஆண்டு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2022 முதல் ரஷியாவுடன் போர் செய்து வரும் உக்ரைனின் பிரதான கோரிக்கை, நேட்டோ நாடுகளுடன் இணைவதே. இந்நிலையில் உக்ரைனுடன் இங்கிலாந்து செய்துள்ள உடன்படிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

    கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்ற நிலையில் கெயர் ஸ்டார்மர் பிரதமர் பதவி ஏற்றார்.

    பதவியேற்றபின் முதல் முறையாக ஸ்டார்மர் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு வருகை தந்துள்ளார். நேற்று [வியாழக்கிழமை] கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இரு நாடு நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் இந்த 100 ஆண்டு உடன்படிக்கையை உறுதி செய்துள்ளார்.

    இந்த 100 ஆண்டு ஒப்பந்தம் - பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியதாகும். ஒப்பந்தத்தின் கீழ், லண்டனும் கீவ்-வும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று ஸ்டார்மர் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். உக்ரைன் எதிர்காலத்தில் நேட்டோ நாடாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

     

    100 ஆண்டு கால ஒப்பந்தத்தின் பல்வேறு கூறுகள் வரும் வாரங்களில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வரும் திங்கட்கிழமை அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப், உக்ரைனில் மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

    • சரடோ, ஏஞ்சல்ஸ், பிரியன்ஸ்க், துலா, டார்ஸ்டன் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல்
    • ரஷியா மீது உக்ரைன் நாடு நடத்தி இருக்கும் மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

    உக்ரைன் நாடு தனது பாதுகாப்புக்காக நேட்டோ அமைப்பில் சேர முயற்சிகள் மேற்கொண்டது. இது தனது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்காது என்று ரஷியா கருதியது. இதனால் உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா அதிரடியாக போர் தொடுத்தது.

    உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கணிசமான நகரங்களை ரஷியா தன் வசப்படுத்திக் கொண்டது. என்றாலும் உக்ரைன் நாட்டு ராணுவம் ரஷியாவை எதிர்த்து தீவிரமாக போரிட்டு வருகிறது. அடிக்கடி இரு நாடுகளும் மாறிமாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்துகின்றன.

    உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உள்பட பல நாடுகள் முயற்சி செய்தன. ஆனால் இதுவரை சமரச தீர்வு எட்டப்படவில்லை. இதனால் 3 ஆண்டுகளாக போர் நீடித்தபடி உள்ளது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ரஷியா நாடு மீது உக்ரைன் தனது தாக்குதல் வியூகங்களை மாற்றி உள்ளது. அதன்படி ரஷியாவின் பல ராணுவ நிலைகள் மீது உக்ரைன் நாடு டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. சில டிரோன்கள் ரஷியாவின் உயரமான கட்டிடங்களை பதம் பார்த்தன.

    இதையடுத்து தனது பாதுகாப்பை உக்ரைன் பகுதியில் மேலும் பலப்படுத்திய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி வந்தது. இந்தநிலையில் நேற்று ரஷியா மீது உக்ரைன் நாடு திடீர் அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.

    ராணுவ தொழிற்சாலை

    ரஷியாவில் உள்ள சரடோ, ஏஞ்சல்ஸ், பிரியன்ஸ்க், துலா, டார்ஸ்டன் ஆகிய நகரங்கள் மீது உக்ரைன் நாட்டின் ஏவுகணைகள் நூற்றுக்கணக்கில் சீறிப்பாய்ந்து தாக்கின. திடீரென உக்ரைன் ஏவுகணைகள் இத்தகைய பலமுனை தாக்குதலை நடத்தும் என்று ரஷியா எதிர்பார்க்கவில்லை.

    என்றாலும் சுதாரித்துக் கொண்ட ரஷிய ராணுவம் பதிலடி தாக்குதலை நடத்தியது. நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய இந்த தாக்குதல்கள் நடந்தன.

     உக்ரைன் ஏவுகணைகள் ரஷியாவின் ராணுவ தொழிற்சாலையை தாக்கி அழித்ததாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த ராணுவ தொழிற்சாலை பீரங்கி, வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை ஆகும்.

    ஆனால் ராணுவ தொழிற்சாலைக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று ரஷியா கூறி உள்ளது.

    எண்ணை கிடங்கு

    அதுபோல ரஷியாவின் விமான எரிபொருள் சேமிப்பு நிலையமான எண்ணை கிடங்கு மீதும் உக்ரைன் குறி வைத்து ஏவுகணைகளை வீசியது. இதில் எண்ணை கிடங்கு தீப்பற்றி எரிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    ஆனால் அந்த எண்ணை கிடங்கை நோக்கி வந்த ஏவுகணைகளை நடுவழியில் மறித்து அழித்து விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. இந்த எண்ணை கிடங்கு உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்துக்கு முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது.

    ரஷியாவின் குண்டு வீசும் போர் விமானங்களுக்கு எரிபொருள் வினியோகம் முழுமையாக இந்த எண்ணை கிடங்கில் இருந்துதான் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரிய தாக்குதல்

    கடந்த சில மாதங்களில் ரஷியா மீது உக்ரைன் நாடு நடத்தி இருக்கும் மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தாக்குதல் காரணமாக ரஷியாவின் சில நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன.

    இந்த தாக்குதல் தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ரஷியா இன்று மீண்டும் அறிவித்தது.

    உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்த போவதாகவும் ரஷியா கூறி உள்ளது. இதனால் ரஷியா- உக்ரைன் போரில் மீண்டும் பதட்டம் எழுந்துள்ளது.

    • குர்ஸ்க் பகுதியில் வடகொரிய வீரர்களை உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
    • என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும்.

    ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 2022 பிப்ரவரி முதல் தீவிரமான போர் நடந்துவருகிறது. மேற்குலகின் நேட்டோ நாடுகளுடன் சேரும் உக்ரைன் உடைய முயற்சி, ரஷியாவுக்கு பாதுகாப்பு அச்சறுத்தல் என்று கூறி ரஷியா போர் தொடுத்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி ரஷியாவுடன் மறைமுக போர் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரிய வீரர்கள் 12,000 பேர் அனுப்பி வைக்கப்பட்டதாக உக்ரைன், தென் கொரியா, அமெரிக்க நாடுகள் எச்சரித்தன. இடையில் போரில் வட கொரிய வீரர்கள் பாஷை புரியாமல் ரஷிய வீரர்களையே சுட்டது என பலவாறான தகவல்கள் வெளிவந்தன.

    இந்நிலையில் ரஷியாவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள குர்ஸ்க் பகுதியில் இரண்டு வடகொரிய வீரர்களை உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, குர்ஸ்க் பகுதியில் வட கொரிய இராணுவ வீரர்களை நமது வீரர்கள் சிறைபிடித்துள்ளனர். காயமடைந்த இரண்டு வீரர்கள், கீவ் -க்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இப்போது பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் உள்ளனர்.

     

    இது எளிதான காரியமல்ல. உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரியாவின் ஈடுபாட்டிற்கான எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்காமல் அழிக்க களத்தில் சண்டையிட்டு காயமடைந்த வட கொரிய வீரர்களை அவர்களே கொலை செய்வார்கள்.

     

    இதை முறியடித்து இரண்டு வட கொரிய வீரர்களை எங்கள் படை சிறைபிடித்துள்ளது பாராட்டத்தக்கது. அனைத்து போர்க் கைதிகளையும் போலவே, இந்த இரண்டு வட கொரிய வீரர்களும் தேவையான மருத்துவ உதவியைப் பெறுகிறார்கள்.

    பத்திரிகையாளர்கள் இந்தக் கைதிகளை அணுக அனுமதிக்குமாறு படையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
    • ஜபோரிஜியா மீது வான்வழி குண்டுகளை வீசி தாக்கினர்.

    உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியாவில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கிட்டத்தட்ட 13 பேர் உயிரழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாக்குதல் மற்றும் உயிரிழப்பு குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

    இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், இரத்த காயம் அடைந்த மக்கள் சாலையிலேயே அவசர படையினர் முதலுதவி சிகிச்சை அளிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தீயனைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கின்றன.

    இத்துடன், "ரஷியர்கள் ஜபோரிஜியா மீது வான்வழி குண்டுகளை வீசி தாக்கினர். இது நகரத்தின் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல். இதுவரை டஜன் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, 13 பேர் கொல்லப்பட்டனர்."

    "அவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கல்கள். துரதிர்ஷ்டவசமாக, உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்தும், ஒரு நகரத்தின் மீது வான்வழி குண்டுகளை வீசுவதை விட கொடூரமானது எதுவும் இல்லை."

    "ரஷியா அதன் பயங்கரவாதத்திற்காக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். உக்ரைனில் உயிர்களைப் பாதுகாக்கும் முயற்சிகள் ஆதரிக்கப்பட வேண்டும். வலிமையின் மூலம் மட்டுமே அத்தகைய போரை நீடித்த அமைதியுடன் முடிவுக்குக் கொண்டுவர முடியும்," என்று கூறினார்.


    • நேற்றிரவு நடந்த தாக்குதலில் 103 ஷாகித் வகை டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன.
    • இந்த ஆளில்லா விமானங்களில் 8,755 வெளிநாட்டு பொருட்கள் இருந்தன என்றார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டை நெருங்கி வருகிறது.

    உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும் உரிய பதிலடி கொடுத்து உக்ரைன் அவற்றை மீட்டது.

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. அந்த நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.

    ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது.

    இந்நிலையில், உக்ரைனில் நேற்று ஒரே நாளில் 103 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியதாவது:

    கடந்த வாரத்தில் 600-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. இவற்றுடன் வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் என உலகம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன.

    ஒவ்வொரு நாளும் ரஷியாவின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் தாக்குதலில் இருந்து எங்களுடைய வான்வெளியை நாங்கள் பாதுகாத்து வருகிறோம்.

    நேற்றிரவு நடந்த தாக்குதலில் ஈடுபட்ட 103 ஷாகித் வகை ஆளில்லா விமானங்களில் 8,755 வெளிநாட்டு பொருட்கள் இருந்தன.

    ரஷியா, அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களைத் தொடர்ந்து பெற்று வருகிறது. ஏறக்குறைய உலகம் முழுவதிலும் இருந்து அவற்றை பெற்று, உக்ரைனில் பயங்கரவாத செயலில் ஈடுபடுவதற்கான ஆயுதங்களில் பயன்படுத்துகிறது.

    ரஷியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைக்கான நெருக்கடி போதிய அளவில் இல்லை என தெரிவித்துள்ளார்.

    • கடற்பகுதியில் ரஷியாவின் போர்க்கப்பல் போன்றவற்றை உக்ரைன் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • தற்போது முதன்முதலாக கடல்சார் டிரோன் மூலம் ஹெலிகாப்டரை தாக்கி அழித்துள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 3 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. ஆனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

    அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியா மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், உக்ரைன் பதிலுக்கு டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த வகையில் இன்று உக்ரைனின் கடல்சார் டிரோன் ரஷியாவின் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது. உக்ரைன் டிரோன் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக தாக்கி அழித்தது இதுவே முதல்முறையாகும்.

    2014-ம் ஆண்டு ரஷியா உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியது. இங்கு ரஷியா போர் கப்பல் மற்றும் போருக்கு தேவையான ஆயுதங்கள் போன்றவற்றை சேமித்து வைத்துள்ளது.

    உக்ரைன் கடல்சார் டிரோன்கள் இவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது முதன்முறையாக ஹெலிகாப்டரைதாக்கி அழைத்து வருகிறது.

    ரஷிய ஹெலிகாப்டரின் உரையாடலை இடைமறித்து கேட்டபோது "வெடிச்சத்தம் கேட்டது. ஹெலிகாப்டர் தாக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என விமானி தெரிவிக்கிறார்.

    மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2-வது நடத்தப்பட்ட தாக்குதலை நான் பார்க்கவில்லை. ஆனால், முதல் தாக்குதல் நேரடியாக தாக்கியது. ஹெலிகாப்டரில் தாக்கப்பட்டதாக உண்கிறேன். சில சிஸ்டம்கள் தோல்வியடைந்துள்ளது. நான் (ஹெலிகாப்டர்) தாக்கப்பட்டேன். கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்" என அவர் பேசுவது பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

    உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் ரஷியாவுக்கு டிரோன் தாக்குதல் மூலம் அழிவை ஏற்படுத்தி வருகிறது.

    உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா போர்க்கப்பல், விமானம் உள்ளிட்டவைகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரஷியாவின் Mi-8 ஹெலிகாப்டரை உக்ரைனின் மகுரா V5 கடல்சார் டிரோன் (Magura V5 naval drone) தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவத்தின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

    ×