என் மலர்tooltip icon

    ஜிம்பாப்வே

    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    ஹராரே:

    அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

    முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என அயர்லாந்தும், ஒருநாள் தொடரை 2-1 என ஜிம்பாப்வேவும் கைப்பற்றின.

    இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லோர்கன் டக்கர் 46 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் ட்ரெவர் குவாண்டு 3 விக்கெட்டும், ரிச்சர்ட் ங்வாரா, சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிக்கந்தர் ராசா 22 ரன், ரியான் பர்ல் 27 ரன் எடுத்து அவுட்டாகினர்.

    அந்த அணியின் டோனி முன்யோங்கா ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார்.

    இறுதியில் ஜிம்பாப்வே அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து போராடி வெற்றி பெற்றது. டோனி முன்யோங்கா 43 ரன் எடுத்து களத்தில் இருந்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஜிம்பாப்வே முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய அயர்லாந்து 249 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஹராரே:

    அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்லி மாதேவரே 61 ரன்னும், சிக்கந்தர் ராசா 58 ரன்னும் எடுத்தனர்.

    அயர்லாந்து சார்பில் மார்க் அடேர் 4 விக்கெட்டும், கர்டிஸ் கேம்பர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால்பிர்னி 11 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.

    அடுத்து இணைந்த பால் ஸ்டிர்லிங்-கர்டிஸ் கேம்பர் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர். பால் ஸ்டிர்லிங் 89 ரன்னும், கர்டிஸ் கேம்பர் 63 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், அயர்லாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ரன்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (18-ம் தேதி) நடைபெற உள்ளது.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
    • டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னெட் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 169 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் கிரெய்க் எர்வின் 66 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே வீரர்கள் துல்லியமாகப் பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், அயர்லாந்து 46 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றதுடன் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • முதல் இன்னிங்சில் அயர்லாந்து 260 ரன்களும், 2-வது இன்னிங்சில் 298 ரன்களும் சேர்த்தது.
    • முதல் இன்னிங்சில் 297 ரன்கள் சேர்த்த ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 228 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    ஜிம்பாப்வே- அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 6-ந்தேதி ஜிம்பாப்வேயின் புலவாயோவில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஆண்டி மெக்பிரைன் 90 ரன்களும், மார்க் அடைர் 78 ரன்களும சேர்த்தனர். ஒரு கட்டத்தில் அயர்லாந்து 82 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இருவரும் சிறப்பாக விளையாடி 7-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    பின்னர் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் நிக் வெல்ச் 90 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். முசாரபானி 47 ரன்கள் எடுத்தார்.

    7 ரன்கள் முன்னிலையுடன் அயர்லாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆண்டி பால்பிரைன் 66 ரன்களும், லோர்கன் டக்கர் 58 ரன்களும் அடிக்க அயர்லாந்து 298 ரன்கள் குவித்தது.

    இதனால் ஜிப்பாப்வே அணிக்கு 292 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்லி மாதவேரே 61 ரன்களுடனும், நியாம்குரி 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கைவசம் 3 விக்கெட், 109 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜிம்பாப்வே களம் இறங்கியது. வெஸ்லி மாதவேரே 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வே 228 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் அயர்லாந்து 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 90 ரன்கள் அடித்த ஆண்டி மெக்பிரைன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    • அயர்லாந்து 2வது இன்னிங்சில் 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 4ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 187 ரன்கள் எடுத்தது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மெக் பிரின் 90 ரன்னும், மார்க் அடைர் 78 ரன்னும் எடுத்தனர்.

    ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக் வெல்க் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய முசாராபாணி 47 ரன் எடுத்து அவுட்டானார்.

    அயர்லாந்து சார்பில் மெக் கார்த்தி 4 விக்கெட்டும், மெக் பிரின் 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பால்பிரின் 66 ரன்னும், லார்கன் டக்கர் 58 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அந்த அணியின் வெஸ்லி மாதவரே ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். பிரியன் பென்னட் 45 ரன்கள் சேர்த்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது.

    நான்காம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது.

    மீதம் ஒருநாள் உள்ள நிலையில் 109 ரன்கள் எடுத்தால் ஜிம்பாப்வே அணியும், 3 விக்கெட் எடுத்தால் அயர்லாந்து அணியும் வெற்றி பெறும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்தது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மெக் பிரின் 90 ரன்னும், மார்க் அடைர் 78 ரன்னும் எடுத்தனர்.

    ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக் வெல்க் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய முசாராபாணி 47 ரன் எடுத்து அவுட்டானார்.

    அயர்லாந்து சார்பில் மெக் கார்த்தி 4 விக்கெட்டும், மெக் பிரின் 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பால்பிரின் 66 ரன்னும், லார்கன் டக்கர் 58 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் மீதம் 2 நாள் உள்ள நிலையில் 254 ரன்கள் எடுத்தால் ஜிம்பாப்வே அணியும், 7 விக்கெட் எடுத்தால் அயர்லாந்து அணியும் வெற்றி பெறும் என்பதால் இப்போட்டியின் முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மெக் பிரின் 90 ரன்னும், மார்க் அடைர் 78 ரன்னும் எடுத்தனர்.

    ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக் வெல்க் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய முசாராபாணி 47 ரன் எடுத்து அவுட்டானார்.

    அயர்லாந்து சார்பில் மெக் கார்த்தி 4 விக்கெட்டும், மெக் பிரின் 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.

    இதன்மூலம் அயர்லாந்து 2வது இன்னிங்சில் இதுவரை 76 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • ஜிம்பாப்வே அணி வெற்றி பெற 278 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    புலவாயோ:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிந்தது.

    இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரேக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, நியூமென் நியாமுரி தலா 3 விக்கெட்டும், முசாராபனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிரெய்க் எர்வின் 75 ரன்னும், சிக்கந்தர் ராசா 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சீன் வில்லியம்ஸ் 49 ரன்னில் அவுட்டானார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அஹ்மத்ஜாய் 3 விக்கெட்டும், பரீத் அஹ்மத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இக்கட்டான சூழலில் சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா சதமடித்து அணியை மீட்டார். சதத்தை எட்டிய ரஹ்மத் ஷா 139 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே நான்காம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கிரெய்க் எர்வின் அரை சதம் கடந்து 53 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 6 விக்கெட்டும், ஜிய உர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இறுதி நாளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 2 விக்கெட்டை வீழ்த்த வேண்டும், ஜிம்பாப்வே வெற்றி பெற 73 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    புலவாயோ:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. புலவாயோவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரேக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, நியூமென் நியாமுரி தலா 3 விக்கெட்டும், முசாராபனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் கிரெய்க் எர்வின் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் அரை சதம் கடந்தனர். எர்வின் 75 ரன்னும், சிக்கந்தர் ராசா 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சீன் வில்லியம்ஸ் 49 ரன்னில் அவுட்டாகி அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை

    இறுதியில், ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அஹ்மத்ஜாய் 3 விக்கெட்டும், பரீத் அஹ்மத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

    • டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    புலவாயோ:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. புலவாயோவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரேக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஜிம்பாப்வே அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி ஆப்கானிஸ்தான் வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, நியூமென் நியாமுரி தலா 3 விக்கெட்டும், முசாராபனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்துள்ளது. மழையால் போட்டி முன்னதாக முடிக்கப்பட்டது.

    • நான்காம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 515 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் ஹஷ்மதுல்லா 179 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி 154 ரன்னும், கேப்டன் கிரெய்க் எர்வின் 104 ரன்னும் எடுத்தனர். பென்னெட் 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பென் கர்ரன் 74 ரன்னிலும், கைடனோ 46 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் கசன்பர் 3 விக்கெட்டும், நவீத் சட்ரன், ஜஹிர் கான், ஜியா உர் ரெஹ்மான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் குவித்தது. ரஹமத் ஷா இரட்டை சதமடித்தும், ஹஷ்மதுல்லா சதமும் அடித்து அசத்தினர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ரஹமத் ஷா 234 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹஷ்மதுல்லா ஷாஹிடி பொறுப்புடன் ஆடி வருகிறார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 364 ரன்கள் சேர்த்துள்ளது.

    இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 515 ரன்கள் குவித்துள்ளது. ஹஷ்மதுல்லா 174 ரன்னும், அப்சர் சசாய் 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    முதல் இன்னிங்சே இன்னும் முடிவடையாததால் இந்தப் போட்டி டிராவில் முடியும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

    • மூன்றாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 425 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் ரஹமத் ஷா இரட்டை சதமடித்து அசத்தினார்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி 154 ரன்னும், கேப்டன் கிரெய்க் எர்வின் 104 ரன்னும் எடுத்தனர். பென்னெட் 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பென் கர்ரன் 74 ரன்னிலும், கைடனோ 46 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் கசன்பர் 3 விக்கெட்டும், நவீத் சட்ரன், ஜஹிர் கான், ஜியா உர் ரெஹ்மான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ரஹமத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இதனால் அணியின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.

    ரஹமத் ஷா இரட்டை சதமடித்தும், ஹஷ்மதுல்லா சதமும் அடித்து அசத்தினர்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்துள்ளது. ரஹமத் ஷா 231 ரன்னும், ஹஷ்மதுல்லா 141 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 361 ரன்கள் சேர்த்துள்ளது. நேற்று முழுவதும் ஜிம்பாப்வே அணியால் ஒரு விக்கெட்கூட வீழ்த்த முடியவில்லை.

    ×