என் மலர்
நீங்கள் தேடியது "Rangasamy"
- புதுச்சேரியில் புதிதாக மது ஆலை தொடங்குவதற்கு சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- புதிய மது ஆலை வந்தால் அரசுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும்.
புதுச்சேரி சட்டசபையில் 2025-26-ம் நிதியாண்டிற்கு ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் பெண்கள், மாணவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபை இன்று காலை கூடியது. சட்டசபை உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது.
புதுச்சேரியில் புதிதாக மது ஆலை தொடங்குவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:
* புதிய மது ஆலை வந்தால் அரசுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும்.
* புதிய மதுபான ஆலை மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* புதுச்சேரியில் பூரண மதுவிலக்கை அனைவரும் ஆதரித்தால் நானும் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2025-2026 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
- ஏராளமான சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 15-வது சட்டசபையின் 6-வது பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் கைலாஷ்நாதன் உரை வாசித்தார். நேற்று 2-வது நாளாக சட்டசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு உறுப்பினர்கள் பேசி கருத்துகளை தெரிவித்தனர்.
இதற்கிடையே பெஞ்சல் புயல் நிவாரணம் முழுமையாக வழங்காததை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் தி.மு.க. காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதை தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியது. நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2025-2026 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றிருந்தது.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்காக கல்லூரியில் படிக்கும் போது மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பன உள்பட ஏராளமான சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
- புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் வழங்காமல் நேரடி நியமன முறையை கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.
- இது அரசின் தவறு என்பதை முதலில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உணர வேண்டும்.
புதுச்சேரி:
சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு முதல் அமைச்சர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் வழங்காமல் நேரடி நியமன முறையை கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.
இதனால் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் எல்.டி.சி., யூ.டி.சி. பணியில் இருப்பவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக வரையறுக்கப்பட்ட துறை போட்டி தேர்வுகள் அரசு நடத்தாததால் மேற்கண்ட அமைச்சக ஊழியர்களுக்கு சரியான கால கட்டங்களில் பதவி உயர்வு கிடைக்கவில்லை.
இது அரசின் தவறு என்பதை முதலில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உணர வேண்டும். இதற்கான தீர்வை உயர் அதிகாரிகள் உடனே ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் தற்போதுள்ள நியமன விதியின்படி உதவியாளர் பதவிக்கு நேரடி தேர்வு நடந்தால் வெளி மாநிலத்தை சேர்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு வரவாய்ப்பு அதிகம் உள்ளது.
மேலும் இதனால் எல்.டி.சி, யூ.டி.சி. பதவிகளுக்கு காலி பணியிடங்கள் உருவாகாத தேக்க நிலை ஏற்படும் இதனால் புதுவையை சேர்ந்த படித்து முடித்த பட்டதாரி இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்புக்கான கனவு பறிபோகும் நிலை உண்டாகும்.
ஆகையால் அரசு உதவியாளர் நியமன விதிகளில் உள்ள குறைபாடுகளை களைந்து புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பதவி உயர்வு மூலம் பயன்பெறும் விதமாக நியமன விதிகளில் திருத்தம் செய்து யூ.பி.எஸ்.சி.க்கு பரிந்துரை செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இதனைஅரசு கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதுவை மாநிலத்தில் தற்போது பணியாற்றி கொண்டிருக்கும் எல்.டி.சி., யூ.டி.சி., உதவியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்
இவ்வாறு நேரு எம்.எல்.ஏ. மனுவில் கூறியுள்ளார்.
- புதுவை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த வாரம் மழை பெய்தது. இந்தநிலையில் கடந்த வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
- புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது, 8.30 மணிமுதல் 8.30 மணிவரை 11 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
புதுச்சேரி:
புதுவை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த வாரம் மழை பெய்தது.
இந்தநிலையில் கடந்த வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் கடலோர மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் பலத்த மழை பெய்தது. புதுவையில் கடந்த 10-ந்தேதி தொடங்கிய மழை நேற்று வரை கொட்டி தீர்த்தது.
இதனால் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. ரெயின்போநகர், பாவாணர் நகர், கிருஷ்ணாநகர், லம்போர்ட் சரவணன் நகர், புஸ்சி வீதி, பட்டேல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
அபிசேகப்பாக்கம் பாலாஜி நகரை சேர்ந்த வீரப்பன் என்பவரது வீட்டின் பின் சுவர் இடிந்து விழுந்தது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். நள்ளிரவு முதல் வரை விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் பகல் முழுவதும் லேசான வெயிலுடன் மழை இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் மீண்டும் முதல் மழை விட்டு விட்டு பெய்தது காலை 8 மணி வரை மழை பெய்த பின்னர் சூரியன் சிறிது சிறிதாக தலை காட்ட ஆரம்பித்தது. இதனிடையே தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தீவிரம் காட்டினர். அதன்படி ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதேபோல் மழையினால் சேதமடைந்த சாலைகளில் ஜல்லி, மண்கொட்டி சீர்செய்யும் பணியும் நடந்தது. மழை இல்லாததால் புதுவை வந்த சுற்றுலா பயணிகளும் நகரை வலம் வந்தனர். காவல் துறையின் எச்சரிக்கையையும் மீறி கடலில் குளித்தவர்களை அப்புறப்படுத்தினர். மழையால் முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது, 8.30 மணிமுதல் 8.30 மணிவரை 11 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக நகர பகுதியில் 17.8 செ.மீ. பதிவாகி இருந்தது. தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் மற்றும் திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மழை சேதங்களை பார்வையிட்டார். வில்லியனூர், அரியூர் திருவண்டார் கோயில், மதகடிப்பட்டு, கே.டி குப்பம், குச்சிபாளையம், பி. எஸ். பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் பார்வையிட்ட அவர் மழை சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் விசாரித்தார்.
- புதுவை கதிர்காமம் கதிர்வேல் சுவாமி தேவஸ்தானத்தில் பைரவர் ஜென்மாஷ்டமி விழா நடந்தது. விழாவையொட்டி யாக பூஜைகள் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் கதிர்வேல் சுவாமி தேவஸ்தானத்தில் பைரவர் ஜென்மாஷ்டமி விழா நடந்தது.
விழாவையொட்டி யாக பூஜைகள் நடந்தது. பைரவருக்கு தயிர், பால், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து பூர்ணா ஹூதி, கலசாபிஷேகம் நடைபெற்றன. பின்னர் பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பைரவருக்கு தீபாராதனை காண்பித்து சாமி தரிசனம் செய்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- புதுவையில் செல்போன், இணையதளம், செயலிகள் மூலம் பணம் அனுப்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- இதற்காக 4 ஆயிரம் சதுர அடியில் 3 மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவையில் செல்போன், இணையதளம், செயலிகள் மூலம் பணம் அனுப்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் சைபர் கிரைம் எனப்படும் இணையதள குற்றங்களும் அதிகரித்துள்ளது. ஏ.டி.எம்.
கார்டு புதுப்பிப்பதாக கூறி, மொபைல் அல்லது லேண்ட் லைனில் அழைத்து ஓ.டி.பி. பெறுகின்றனர்.
இதில் வங்கி விவரங்களை பெற்று பணத்தை திருடுகின்றனர். பிரபல நிறுவனத்தில் 50 சதவீத தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம் என ஆசைவார்த்தை கூறியும் பணம் பறிக்கின்றனர்.
இதுபோல பல்வேறு செயலிகள் மூலம் குற்றங்கள் நடக்கிறது. அமைச்சர்கள் பெயரிலேயே முகநூலில் பதிவிட்டு பணம் பறிக்கவும் முயற்சித்துள்ளனர். படிக்காதவர்களை விட படித்தவர்கள் பலரும் இதில் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே சைபர் குற்றங்களை தடுக்க தனி போலீஸ் நிலையம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இதன்படி கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் புதுவையின் முதல் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது.
இதற்காக 4 ஆயிரம் சதுர அடியில் 3 மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், டி.ஜி.பி. மனோஜ்குமார்லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரன் மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. பிரிவின் கீழ் சைபர் கிரைம் பிரிவு செயல்பட்டு வந்தது. இனிமேல் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் தனியாக வழக்குகள் பதிவு செய்யப்படும். சைபர் போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 இன்ஸ்பெக்டர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 12 போலீசார் முதல்கட்டமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சைபர் குற்றங்கள் மூலம் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். புதிய சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு குற்றங்களை கண்டறிய ரூ.2 கோடி மதிப்பிலான அதி நவீன கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன.
- புதுவை கூட்டுற வுத்துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மற்றும் கண்காட்சி திறப்புவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
- ஆனால் தற்போதைய நிலை என்ன? புதுவையில் அனைத்து கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் லாபகரமாக இயங்கியது.
புதுச்சேரி:
புதுவை கூட்டுற வுத்துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மற்றும் கண்காட்சி திறப்புவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
கண்காட்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் வல்லவன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தையா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவையில் பாண்டெக்ஸ் தயாரிப்பு பொருட்களுக்கு தனி மவுசு இருந்தது. சர்க்கரை ஆலை லாபகரமாக இயங்கியது. தனியார் அதிக லாபம் ஈட்டக்கூடிய பெட்ரோல் பங்க், மதுபான கடைகள் ஆரம்பிக்க பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தனியார் மதுபான கடைகள் அதிகளவில் லாபம் ஈட்டுகின்றனர். ஆனால் அருகில் உள்ள அரசு மதுபான கடைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியது. இதனால்தான் மதுபான கடைகளை தனியாரிடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. காரைக்கால் ஜெயபிரகாஷ் நாராயணன் மில் சிறப்பாக இயங்கி வந்தது.
ஆனால் தற்போதைய நிலை என்ன? புதுவையில் அனைத்து கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் லாபகரமாக இயங்கியது. ஆனால் தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்திற்கு சென்றுள்ளன. இதற்கு ஊழியர்கள் தங்கள் பணியினை சரிவர செய்யாததுதான் காரணம்.
அரசு ஊழியர் என நாம் நினைக்கக்கூடாது. நாம் வேலைபார்த்தால்தான் நிறுவனம் சரியாக செயல்படும் என கருத வேண்டும். பல நிறுவன ஊழியர்கள் இப்போது ஏதாவது சம்பளம் கொடுங்கள் என கேட்கின்ற னர். வயிறு காய்ந்தவுடன் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
அரசு நிதி ஒதுக்கி, லாபத்தில் இயங்கியபோதே நன்றாக வேலை செய்திரு ந்தால் கூட்டுறவு நிறுவ னங்களுக்கு இந்தநிலை ஏற்பட்டி ருக்காது. கூட்டுறவு நிறுவனம், சங்கங்களை சேர்ந்தவர்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும். பொறுப்பை உணர்ந்து செயல்படாவிட்டால் நிறுவனத்தை நன்றாக செயல்படுத்த முடியாது.
நிறுவனம் நன்றாக செயல்படா விட்டால் 30 மாதம், 40 மாதம் சம்பள பாக்கி ஏற்படத்தான் செய்யும். நிறுவனங்களின் இந்த செயல்பாடால் கூட்டுறவு வங்கிகளும் நலிவடைந்துள்ளன. ஊழியர்களும், நிர்வாக த்திற்கு வருபவர்களும் இணைந்து சிறப்பாக செயல்பட்டால்தான் கூட்டுறவு நிறுவனங்களை செயல்படுத்த முடியும்.
சிறப்பாக செயல்பட்ட பாண்லே நிர்வாகத்திலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களை சிறப்பாக கொண்டுவர முடியும். இதற்கு அதிகாரிகள், ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்ற வேண்டும். நான் சொல்வது சிலருக்கு வருத்தமாக இருக்கலாம்.
ஆனால் உண்மை நிலையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களை உழைப்பால் உயர்த்தி க்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்.
- ஆளுநருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு என கூறுகிறார்கள். ஆளுநர் உடனான உறவு சுமூகமாக உள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் இருந்து வெளியே வந்த அவர் கோவில் பணியாளர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதங்களை வழங்கினார்.
பின்னர் அவர் கோவில் யானை தெய்வானையிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். ஆளுநரின் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ளவில்லை என கூறுகின்றனர்.
எனக்கு வேறு சில நிகழ்ச்சிகளுக்காக வெளியே செல்ல வேண்டியதிருக்கும். இதனை வைத்து ஆளுநருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு என கூறுகிறார்கள். ஆளுநர் உடனான உறவு சுமூகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா முழுவதும் மதுவுக்கு எதிரான கொள்கைதான் பா.ஜனதாவின் கொள்கை.
- புதுவை மாநில பா.ஜனதாவும் அதே கொள்கையோடுதான் செயல்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசின் கலால்துறை சார்பில் விடுதிகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுபார்கள் அமைக்க கடந்த காலத்தில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
தற்போது விதிமுறைகள் அகற்றப்பட்டு, மதுபார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் புதிது, புதிதாக நகர பகுதியில் பார்கள் உருவாகி வருகிறது. கோவில், குடியிருப்பு, பள்ளி, மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பார்கள் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
புதுவை அரசு புதிதாக 5 மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே புதுவை மாநிலத்தில் 5 மதுபான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் கூடுதலாக மதுபான தொழிற்சாலைகள் அமைவது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதோடு, குடிநீர் தட்டுப்பாடை உருவாக்கும் என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மதுபான ஆலை, மதுபார் திறக்க திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்தித்தது. எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோர், சில நாட்களுக்கு முன்பு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தித்து கடிதம் அளித்தனர்.
அதில் மதுபான கொள்கையில் புதுவை பா.ஜனதாவின் நிலைப்பாடு என்ன? என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்தியா முழுவதும் மதுவுக்கு எதிரான கொள்கைதான் பா.ஜனதாவின் கொள்கை. புதுவை மாநில பா.ஜனதாவும் அதே கொள்கையோடுதான் செயல்பட்டு வருகிறது. கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் 12 பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிலைப்பாடும் இதுதான்.
மக்களின் மன நிலையும் மதுவுக்கு எதிராகத்தான் உள்ளது. இதனால்தான் மக்கள் திரண்டு போரட்டம் நடத்துகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என பா.ஜனதா சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, மக்களின் எண்ணங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட 5 மதுபான தொழிற்சாலைகள், 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா மதுபான உரிமங்களுக்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்யும் உத்தரவை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறப்பிக்க வேண்டும் என பா.ஜனதா சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முதல்-அமைச்சர் சுமூகமான தீர்வு காண வேண்டும் என பா.ஜனதா விரும்புகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜனதா அரசின் முடிவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளது ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
- ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் கேலி செய்கின்றனர்.
- எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறேன்.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவில்தான் புதுவையின் ஒவ்வொரு நகர்வும் இருப்பதால் மாநில அந்தஸ்து அவசியம் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுவதாக முதல்வர் ரங்கசாமி வேதனையுடன் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தக்கூடாது என அதிகாரிகள் உள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் செய்வதில் சிரமம் உள்ளது என ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் கேலி செய்கின்றனர். புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை அரசு இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.3.56 கோடி செலவில் நவீனமுறை மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த நவீன ஆய்வகத்தில் வைரஸ் வகைகளைக் கண்டறியும் அதிநவீன வசதிகள் உள்ளன.
புதுச்சேரி:
புதுவை அரசு இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.3.56 கோடி செலவில் நவீனமுறை மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தை கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.பி.ரமேஷ் முன்னிலையில், முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அரசு செயலர் உதய குமார், இயக்குநர் ஸ்ரீராமுலு, மருத்துவ கல்லூரி இயக்குநர் உதயசங்கர், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ், நுண்ணுயிரியல் துறைத் தலைவர் நந்திதா பனாஜி, நோடல் அதிகாரி சீனிவாசன், நிர்வாக அதிகாரி முத்துலிங்கம் மற்றும் பிற முக்கிய உறுப்பினர்கள், ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மற்றும் பிற துணைப் பணியாளர்கள் பங்குபெற்றனர்.
இந்த நவீன ஆய்வகத்தில் வைரஸ் வகைகளைக் கண்டறியும் அதிநவீன வசதிகள் உள்ளன. ஓமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா கிருமியை சரியாக கண்டறிய முடியும்.
எந்த உருவம் எந்தவொரு கிருமி மாறினாலும் அதனை இந்த ஆய்வகம் மூலம் கண்டறிந்து விடலாம். மரபணு பகுப்பாய்விற்கு பிற மாநிலங்களுக்கு மாதிரிகளை அனுப்ப வேண்டிய தேவை தவிர்க்கப்படும்.
இந்த ஆய்வகம் ஒரு இணைப்பு மையமாக செயல்பட்டு புதுவை, சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு சேவை செய்யும். இந்த நவீன ஆய்வகம் கொரோனாவுக்கு மட்டுமின்றி, வரும் காலங்களில் எந்த கிருமிகள் மூலம் தொற்று ஏற்பட்டாலும், இதர பல கிருமிகளை பற்றியும் தெரிந்து கொள்ள அமைக்கப்பட்டுள்ளது.
- மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
- ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டுமா? வேண்டாமா? என முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரசும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாநில அந்தஸ்து பெற அரசு ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? எனவும் தெரிவிக்க வேண்டும்.
மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது. புதுவையின் நிர்வாக தலைமையாக இருக்கும் கவர்னர் மாநில அந்தஸ்தில் கிடைப்பதெல்லம் இப்போதே கிடைக்கிறது என்கிறார். ஆனால் முதலமைச்சர் அதிகாரம் தேவை என கூறுகிறார்.
உண்மையிலேயே மாநில அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சியில்தான் ரங்கசாமி உள்ளாரா? இல்லை கவர்னரையும், மத்திய அரசையும் மிரட்டுவதற்காக மாநில அந்தஸ்தை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா? அண்ணன் தங்கையாக இருந்தாலே பாக பிரிவினை, பங்கு பிரிவினை இருக்கத்தான் செய்யும். வரும் ஆண்டிலாவது முதலமைச்சர் நிலையான முடிவை இவ்விவகாரத்தில் தெரிவிக்க வேண்டும்.
சுயேச்சை எம்.எல்.ஏ. வை தூண்டிவிடுவது, பிற கட்சியினரை தூண்டுவது போன்ற நிலைப்பாடை கைவிட வேண்டும். நேரடியாக முதலமைச்சரே களம் இறங்க வேண்டும். அப்படி முதலமைச்சர் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்தால் பாராளுமன்றத்திலும், வெளியிலும் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.
வீதிக்கு வீதி திறக்கப்படும் மதுக்கடைகளால் மக்கள் போராட்டம் ஏற்பட்டுள்ளது. ரேஷன்கடை இருந்த இடமெல்லாம் மதுக்கடைகள் திறந்து வருகின்றனர். இதில் சில மதுக்கடைகளில் பெண்களுக்கு தனி வசதி என விளம்பரப்படுத்துகின்றனர். இதுவரை ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது. இது மிகப்பெரும் கலாச்சார சீரழிவு. குடும்பங்களை அழிக்கும் முயற்சி.
எனவே மதுக்கடைகளின் எண்ணிக்கை, நேரத்தை குறைக்க வேண்டும். மாநில அந்தஸ்து கேட்பவர்கள் மீதும், மதுக்கடை எதிர்ப்பு போராளிகள் மீதும் கடுமையான சட்டங்கள் பாய்கிறது. மதுக்கடை உரிமையாளர்களுக்கு அரசு துணை செல்கிறதா? இதுதான் பிரதமர் மோடி அறிவித்த பெஸ்ட் புதுவையா? அமித்ஷா அறிவித்த எக்சலண்ட் புதுவையா? இதற்காகத்தான் மாநில அந்தஸ்து கேட்கிறார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.